விஷாலின் நட்புக்காக கார்த்தி செய்துள்ள சம்பவம்.. ‘மார்க் ஆண்டனி’-ல் காத்திருக்கும் சர்ப்ரைஸ் !

mark antony

 விஷாலின் ‘மார்க் ஆண்டனி’ படத்தில் கார்த்தி இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் மற்றும் எஸ்ஜே சூர்யா இணைந்து நடித்துள்ள திரைப்படம் ‘மார்க் ஆண்டனி’.  இந்த படத்தில் கதாநாயகியாக ரித்து வர்மா நடித்துள்ளார். இவர்களுடன் தெலுங்கு நடிகர் சுனில், செல்வராகவன், ஓய்.ஜி.மகேந்திரன், ரெடின் கிங்ஸ்லி, அபிநயா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

mark antony

 ப்ரீயட் படமாக உருவாகியுள்ள இந்த படம் இரண்டு காலக்கட்டங்களில் உருவாகியுள்ளது. அதாவது 1970-களில் நடப்பது போன்றும், 1990-களில் நடப்பது போன்றும் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது. மினி ஸ்டுடியோ நிறுவனம் தயாரிக்கும் இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் பான் இந்தியா திரைப்படமாக உருவாகியுள்ளது.

mark antony

முதல் முறையாக தமிழில் உருவாகியுள்ள டைம் டிராவல் கேங்ஸ்டர் படம் இதுதான். சமீபத்தில் படத்தின் டீசர் மற்றும் ஃப்ர்ஸ்ட் சிங்கிள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. வரும் செப்டம்பர் மாதம் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் ஓபனிங்கில் நடிகர் கார்த்தி வாய்ஸ் ஓவர் ஒன்றை கொடுத்துள்ளார். விஷாலின் நட்புக்காக அவரை இதை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளளது. 

Share this story