“பாகிஸ்தான் மக்களையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும்" - விஜய் ஆண்டனி

vijat antony


“பாகிஸ்தானில் வசிக்கும் மக்களும் நம்மை போல அமைதியையும், மகிழ்ச்சியையும் மட்டுமே விரும்புகிறார்கள்” என பஹல்காம் தாக்குதல் குறித்து இசையமைப்பாளரும், நடிகருமான விஜய் ஆண்டனி கருத்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “காஷ்மீரில் உயிரிழந்த சகோதரர்களுக்கும், அவர்களின் குடும்பங்களுக்கும், என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.அதே சமயத்தில் பாகிஸ்தானில் வசிக்கும் 50 லட்சம் இந்தியர்களையும், பாகிஸ்தான் பொது மக்களையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும். அவர்களும், நம்மை போல அமைதியையும், மகிழ்ச்சியையும் மட்டுமே விரும்புகிறார்கள். வெறுப்பை கடந்து மனிதத்தை வளர்ப்போம்” என தெரிவித்துள்ளார்.



 

Share this story