குறைகளோடும் தவறுகளோடும் தான் படம் எடுக்கிறோம் - வெற்றிமாறன்

குறைகளோடும் தவறுகளோடும் தான் படம் எடுக்கிறோம் - வெற்றிமாறன் 

21வது சென்னை சர்வதேச திரைப்பட விழா சென்னையில் கடந்த  14ஆம் தேதி முதல் 21 தேதி வரை நடந்து முடிந்துள்ளது. இதில் 57 நாடுகளை சேர்ந்த 126 திரைப்படங்கள் திரையிடப்படன. சினி அப்ரிசேஷன் தமிழக அரசுடன் இணைந்து நடத்தும் இந்த விழாவில் 12 தமிழ் படங்கள் திரையிடப்படும், அதில் 3 படங்கள் விருதை பெறும். அந்த வகையில் இம்முறை, அநீதி, அயோதி, கருமேகங்கள் கலைகின்றன, போர் தொழில், மாமன்னன், செம்பி, வி3, ஸ்டார்ட் கேமரா ஆக்ஷன், விடுதலை பாகம்1, உடன்பால், ராவணகோட்டம் , சாயாவனம் ஆகிய படங்கள் திரையிடப்பட்டது.

விடுதலை படத்தின் முதல் பாகத்திற்காக இயக்குநர் வெற்றிமாறனுக்கு சிறப்பு ஜூரி விருது அறிவிக்கப்பட்டது. விருதை பெற்றுக்கொண்டு மேடையில் பேசிய வெற்றிமாறன், எனது படங்களில் அதிக சீன்களில் டப்பிங் சரியாக இருக்காது. ஆனால், அனைத்து படங்களையும் நிறைய குறைகளோடும், தவறுகளோடும் தான் எடுத்து முடிக்கிறோம் என தெரிவித்துள்ளார். 
 

Share this story