உலக நாயகன் பட்டம் வேண்டாம் என முடிவெடுத்தது ஏன்? - நடிகர் கமல்ஹாசன் விளக்கம்..!

kamal

தன்னை உலக நாயகனாக நினைத்து செயல்பட்டிருந்தால் பெரும் இழப்பை சந்தித்திருப்பேன் என்று நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

தனக்கு வழங்கப்பட்ட உலக நாயகன் பட்டம் குறித்து நடிகர் கமல்ஹாசன் மனம் திறந்து கருத்து தெரிவித்தார். அதில், "இவர் வழங்கிய பட்டத்தை வைத்துக்கொண்டு இந்த உலகத்துக்கே நான் தான் நாயகன் என்று கருதி செயல்பட்டிருந்தால் பெரும் இழப்பு தான் ஏற்பட்டிருக்கும். நான் அதெல்லாம் நம்புவது கிடையாது" என்று தெரிவித்தார்.
மறைந்த நடிகரும், எழுத்தாளருமான கிரேஸி மோகன் எழுதிய 25 புத்தகங்கள் வெளியீட்டு விழா சென்னை மயிலாப்பூரில் நடைபெற்றது. இதில், நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவருமான கமல்ஹாசன் கலந்து கொண்டு புத்தகங்களை வெளியிட்டார்.

kamal

இந்நிகழ்ச்சியில் பேசிய அவர், கிரேஸி மோகன் எழுதிய நாடகத்தை விட அவர் உன்னதமான மனிதர் என்று உருக்கமாகத் தெரிவித்தார். மேலும், மொழிக்கான மரியாதை எப்போதும் உண்டு என்று கூறிய கமல்ஹாசன், எத்தனை தொழில்நுட்பம் வந்தாலும் மொழி பேசும் என்றும் குறிப்பிட்டார். அனைவருக்கும் கருணை காட்ட வேண்டும் என்று கமல்ஹாசன் கேட்டுக் கொண்டார். இயக்குநர் பாலசந்தர் காட்டிய கருணையால் நான், ரஜினி, சிரஞ்சீவி ஆகியோர் சினிமாவில் இருக்கிறோம் என்றும் கமல் கூறினார்.
 
இதற்கிடையே, இந்நிகழ்ச்சியில் பேசிய நடிகர் ஜெயராம், கமல்ஹாசனின் குரலை மிமிக்ரி செய்து அசத்தினார். கமல்ஹாசனுடன் ஒரே மேடையில் அமர்வதை ஆசிர்வதிக்கப்பட்டதைப் போன்று உணர்வதாகவும் ஜெயராம் நெகிழ்ச்சிபடத் தெரிவித்தார்.
 

Share this story