"அற்புதமான அனுபவத்தை என்றென்றும் போற்றுவேன்..." இயக்குனர் லோகேஷ் கனகராஜ்...

ரஜினிகாந்த் நடிக்கும் ‘கூலி’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில், இந்த அற்புதமான அனுபவத்தை என்றென்றும் போற்றுவேன்... என இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி, நாகார்ஜுனா, உபேந்திரா, சத்யராஜ், ஸ்ருதிஹாசன், செளபின் ஷாகிர் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘கூலி’. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்துக்கு அனிருத் இசையமைத்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் மும்முரமாக நடைபெற்று வந்தது. இந்த நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு ஒட்டுமொத்தமாக நிறைவடைந்ததுள்ளது. இறுதிகட்ட பணிகளை ஒரே கட்டமாக முடித்து ஆகஸ்ட் மாதத்தில் இப்படத்தை திரைக்கு கொண்டு வர படக்குழு திட்டமிட்டுள்ளது.
IT’S A WRAP FOR #COOLIE 💥 💥
— Lokesh Kanagaraj (@Dir_Lokesh) March 18, 2025
What an incredible experience it has been travelling with @rajinikanth sir, @iamnagarjuna sir, @nimmaupendra sir, #SathyaRaj sir, #SoubinShahir sir, @shrutihaasan and the entire team 🤗🤗❤️❤️
Will forever cherish this amazing experience 🤗🙏 pic.twitter.com/yBuJ3wdEc1
இந்நிலையில், படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக வீடியோ மற்றும் புகைப்படங்களை படக்குழு பகிர்ந்துள்ளது. இதுகுறித்து நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ள இயக்குனர் லோகேஷ் கனகராஜ், ரஜினிகாந்த் சார், நாகார்ஜுனா சார், உபேந்திரா சார், சத்யராஜ் சார், சௌபின் ஷாஹிர் சார்,
ஸ்ருதிஹாசன் மற்றும் அனைத்து குழுவினருக்கும் நன்றி, இந்த அற்புதமான அனுபவத்தை என்றும் போற்றுவேன் என தெரிவித்துள்ளார்.