நீண்ட இழிப்பறிக்கு பிறகு வெளியாகும் விஜய் சேதுபதியின் படம்.. புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு !

YaadhumOoreYaavarumKelir

விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. 

நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி கடந்த இரண்டு ஆண்டுகளாக ரிலீசாகாமல் இருக்கும் திரைப்படம் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’. மறைந்த இயக்குனர் ஜனநாதனிடம் உதவி இயக்குனராக இருந்த வெங்கடகிருஷ்ணன் ரோஹந்த் இந்த படத்தை இயக்கியுள்ளார். விஜய் சேதுபதி இந்த படத்தில் முதல்முறையாக இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். 

YaadhumOoreYaavarumKelir

விஜய் சேதுபதிக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடித்துள்ளார். இவர்களுடன் இயக்குனர் மோகன் ராஜா, விவேக், விஸ்வகுமார், கனிகா, ரித்விகா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.பிரபல இயக்குனர் மகிழ் திருமேனி வில்லனாக நடித்துள்ள இப்படத்தை சந்திரா ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ள இப்படத்தில் மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவு செய்துள்ளார்.

ஏற்கனவே இந்த படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் இந்த படம் சில காரணங்களால் கடந்த இரண்டு ஆண்டுகளாக ரிலீசாகாமல் இருந்தது. இதையடுத்து தற்போது புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இப்படம் வரும் மே 19-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

Share this story