ஏங்க இவ்வளவு வன்மத்தோட வாழுறீங்க.. பிக்பாஸ் போட்டியாளர் கேட்ட ஆவேசமான கேள்வி..!

big boss

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பம் முதலில் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில், முதல் வாரம் ரவீந்தர் எலிமினேஷன் செய்யப்பட்டார் என்பது தெரிந்தது. இந்த நிலையில் ஒவ்வொரு நாளும், தினமும் சில புரமோ வீடியோக்கள் வெளியாகி, அன்றைய எபிசோடு எதிர்பார்ப்பை அதிகரித்து வரும் நிலையில், சற்று முன் இன்றைய 10வது நாளின் முதல் புரமோ வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

அந்த வீடியோவில் ’டாஸ்க் ஆரம்பித்ததில் இருந்து ஆனந்தியை விட நான் பெஸ்ட் என்று நினைக்கிறேன். அதேபோல் விஷாலை விட ஒரு படி நான் மேல், முதலிடத்திற்கு தகுதியானவன் என்று நினைக்கிறேன் என்று முத்துக்குமார் கூறுகிறார்.இதனை அடுத்து பேசும் விஷால், என்னுடைய பெஸ்ட்டை நான் கொடுத்திருக்கிறேன், எனக்கு இந்த ஃபர்ஸ்ட் பொசிஷன் வேண்டும் என்று நினைக்கிறேன் என்று கூறுகிறார். இதை அடுத்து பேசும் ஆனந்தி, “இவங்க இரண்டு பேர் பக்கத்துல ஆர் ஜே ஆனந்தியாக இல்லாமல் ஒரு ஹீரோவா இருப்பதற்கு ஒரு எக்ஸ்ட்ரா முயற்சியை நான் போட்டு இருக்கிறேன். எனவே நான் தான் ஒரு சிஇஓவாக இருப்பதற்கு தகுதி என நினைக்கிறேன்’ என்று கூறுகிறார்.


ஒரு சிஇஓவாக இருப்பதற்கு அவர்கள் எப்படி முயற்சி எடுத்தாங்களோ’என்று முத்துக்குமார் கூற, அதற்கு சக போட்டியாளர்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். “ஏன் எதிர்த்து பேசக்கூடாது என்று செல்கிறீர்கள்? எதற்காக இப்படி சொல்கிறீர்கள்?” உங்களுடைய பேவரிசத்தை தயவு செய்து காட்ட வேண்டாம். ஏன் இவ்வளவு வன்மையாக வாழ்கிறீர்கள்?” என்று முத்துக்குமார் கூறுகிறார்.

இதனை அடுத்து, சக போட்டியாளர்கள் மட்டுமின்றி பார்வையாளர்களும் அதை கேட்டு அதிர்ச்சி அடைந்துள்ளதாக தெரிகிறது. இந்த நிலையில், இன்றைய டாஸ்க்கின் முதல் இடத்தை ஆர்ஜே ஆனந்தி, முத்துக்குமார் மற்றும் விஷால், இவர்களில் யார் பெறுகிறார்கள் என்பதை இன்றைய எபிசோடில் பார்ப்போம்.

Share this story