வெள்ளித் திரையிலிருந்து சின்னத் திரைக்கு மாறிய ‘குரங்கு பொம்மை’ நடிகை!

வெள்ளித் திரையிலிருந்து சின்னத் திரைக்கு மாறிய ‘குரங்கு பொம்மை’ நடிகை!

பெரியத்திரையிலிருந்து “அன்பேவா “ என்றபுதிய
மெகாத்தொடரின்மூலம்சின்னத்திரைக்குவரும்
”குரங்குபொம்மை” படகதாநாயகி

விதார்த், பாரதிராஜா நடிப்பில் வெளியான குரங்குபொம்மை படத்தில் டெல்னா டேவிஸ் கதாநாயகியாக நடித்திருந்தார். அதன் பின்பு வேறு எந்தப் படத்திலும் நடிக்காத டெல்னா தற்போது சின்னத்திரையில் நுழைந்துள்ளார்.

வெள்ளித் திரையிலிருந்து சின்னத் திரைக்கு மாறிய ‘குரங்கு பொம்மை’ நடிகை!

சன் டிவியில் வரும் நவம்பர் 2-ம் தேதி முதல் இரவு 9 மணிக்கு ‘அன்பே வா’ என்ற மெகாத்தொடர் ஒளிபரப்பாக உள்ளது.

குடும்பப் பின்னணியில், அழகான காதலை மையமாக வைத்து, “ அன்பேவா கதை அமைக்கப்பட்டுள்ளது. வருண்–பூமிகா இருவரும் முற்றிலும் மாறுபட்ட இருவேறு எதிரெதிர் பின்னணியில் இருந்து வந்தவர்கள்.

நாயகி பூமிகா,மிகவும் பொறுப்பான, தன்னம்பிக்கையுள்ளவள். கிராமத்து சூழலில் வளர்ந்த பாரம்பரியம் மிக்க பெண்.
நாயகன் வருண்,பணக்கார சூழலில் வளர்ந்த ஆடம்பரமான இளைஞன்.

வெள்ளித் திரையிலிருந்து சின்னத் திரைக்கு மாறிய ‘குரங்கு பொம்மை’ நடிகை!

விதியின் சந்தர்ப்பவசத்தால் இருவரும் ஒரே சூழலில் வாழ நேரிடுகிறது.
இருவரும் அவர்களுக்குள் இருக்கும் உண்மையான அன்பையும் காதலையும் கண்டுபிடித்து, திருமணத்தில் இணைவார்களா என்பது அன்பே வா கதைச் சுருக்கம்.

விராட் நாயகனாகவும், குரங்கு பொம்மை பட நாயகி டெல்னா டேவிஸ் பெரிய திரையிலிருந்து, சின்னத்திரைக்கு அன்பேவா எனும்புதிய மெகாத்தொடர் மூலம், கதாநாயகியாக அறிமுகமாகிறார். மற்றும் வினயாப்ரசாத், ஆனந்த், கன்யா, ரேஷ்மா, கெளசல்யா செந்தாமரை, பிர்லாபோஸ், துரை ஆகியோர் நடித்துள்ளனர்.

வெள்ளித் திரையிலிருந்து சின்னத் திரைக்கு மாறிய ‘குரங்கு பொம்மை’ நடிகை!

சரிகமா இந்தியா லிட் சார்பாக, Vice President B.R விஜயலட்சுமி தயாரிக்கிறார்.

R. ப்ரின்ஸ்இமானுவேல் இந்தத் தொடரை இயக்குகிறார். இந்த தொடருக்கு ராஜஸ்ரீ N.Roy திரைக்கதை எழுதியுள்ளார். ரதிபாலா வசனம் எழுதியுள்ளார்.

Share this story