வித்தியாசமான கதைகளை தேடும் பிரபல தயாரிப்பு நிறுவனம்.. இயக்குனர்கள் ரெடியா ?

வித்தியாசமான கதைகளை தேடும் பிரபல தயாரிப்பு நிறுவனம்.. இயக்குனர்கள் ரெடியா ?

வித்தியாசமான கதைகளை வைத்திருக்கும் இயக்குனர்களுக்கு பிரபல தயாரிப்பு நிறுவனமான லைக்கா அழைப்பு விடுத்துள்ளது.

வித்தியாசமான கதைகளை தேடும் பிரபல தயாரிப்பு நிறுவனம்.. இயக்குனர்கள் ரெடியா ?

தமிழ் திரையுலகில் பிரம்மாண்ட படங்களை தயாரித்து வருகிறது லைக்கா தயாரிப்பு நிறுவனம். இந்நிறுவனம் தமிழில் முன்னணி ஹீரோக்களான ரஜினி, கமல், விஜய், சூர்யா, தனுஷ், சிம்பு உள்ளிட்டவர்களின் படங்களை தயாரித்து வெளியிட்டுள்ளது. இதில் கத்தி, எந்திரன், வடசென்னை, தர்பார் ஆகிய படங்கள் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றுள்ளனர்.

வித்தியாசமான கதைகளை தேடும் பிரபல தயாரிப்பு நிறுவனம்.. இயக்குனர்கள் ரெடியா ?

லைக்கா நிறுவனத்தை சுபாஸ்கரன் அல்லிராஜா என்பவர் கடந்த 2014ம் ஆண்டு சென்னையை தொடங்கினார். தற்போது இந்நிறுவனம் கமல்-ஷங்கர் கூட்டணியில் உருவாகி வரும் ‘இந்தியன் 2’ படத்தை தயாரித்து வருகிறது. இதேபோன்று மணிரத்னம் இயக்கி வரும் பிரம்மாண்ட படமான ‘பொன்னியின் செல்வன்’ படமும் லைக்கா தயாரிப்பில் உருவாகி வருகிறது.

இந்நிலையில் லைக்கா நிறுவனம் புதிய விளம்பரத்தை வெளியிட்டுள்ளது. அதில் கொரானா தொற்று குறைந்து வருவதால் அடுத்தடுத்த படங்களை லைக்கா தயாரிக்க உள்ளது. அதனால் வித்தியாசமான கதை வைத்திருக்கும் இயக்குனர்களை தேடி வருகிறது. ஆர்வம் உள்ள இயக்குனர்கள் தங்களது முகவரி மற்றும் கதைச்சுருக்கத்தை story@lycaproductions.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பும்படி கேட்டுக்கொண்டுள்ளது. இயக்குனர்களை ஊக்குவிக்கும் லைக்கா நிறுவனத்தின் இந்த முயற்சிக்கு ஏராளமானோர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

Share this story