காலம் கடந்தும் கவனம் ஈர்க்கும் படம்… 'ஓ மை கடவுளே' படத்தைப் புகழ்ந்து தள்ளிய தெலுங்கு சூப்பர் ஸ்டார்!

காலம் கடந்தும் கவனம் ஈர்க்கும் படம்… 'ஓ மை கடவுளே' படத்தைப் புகழ்ந்து தள்ளிய தெலுங்கு சூப்பர் ஸ்டார்!

இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் நடிகர் அசோக் செல்வன், ரித்திகா சிங் , வாணி போஜன் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘ஓ மை கடவுளே’ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தில் விஜய் சேதுபதி கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார். எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் வெளியான இந்தப் படம் இளைஞர்களால் கொண்டாடப்பட்டது.
காலம் கடந்தும் கவனம் ஈர்க்கும் படம்… 'ஓ மை கடவுளே' படத்தைப் புகழ்ந்து தள்ளிய தெலுங்கு சூப்பர் ஸ்டார்!
‘ஓ மை கடவுளே’ திரைப்படம் தெலுங்கு மற்றும் இந்தியிலும் ரீமேக் ஆவதாக செய்திகள் வெளியாகின. பிரபலங்கள் பலரும் இந்தப் படத்தைப் புகழ்ந்து பாராட்டினார். தற்போது தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவும் படத்தைப் பார்த்துவிட்டு பாராட்டி பதிவிட்டுள்ளார்.
காலம் கடந்தும் கவனம் ஈர்க்கும் படம்… 'ஓ மை கடவுளே' படத்தைப் புகழ்ந்து தள்ளிய தெலுங்கு சூப்பர் ஸ்டார்!
அவர் வெளியிட்டுள்ள பதிவில் “ஓ மை கடவுளே படத்தின் ஒவ்வொரு காட்சியையும் ரசித்து மகிழ்ந்தேன். மிகச் சிறந்த நடிப்புகள் மற்றும் திறமையான எழுத்து மற்றும் இயக்கம்… அசோக் செல்வன் இயற்கையாக நடித்துள்ளீர்கள், வாழ்த்துக்கள்” என்று தெரிவித்துள்ளார்.

Share this story