ராமராக மகேஷ் பாபு, ராவணனாக ஹ்ரித்திக் ரோஷன், சீதையாக தீபிகா படுகோனே! எப்டி இருக்கு இந்த காம்போ!?

ராமராக மகேஷ் பாபு, ராவணனாக ஹ்ரித்திக் ரோஷன், சீதையாக தீபிகா படுகோனே! எப்டி இருக்கு இந்த காம்போ!?

தயாரிப்பாளர் மதுமந்தேனா ராமாயணக் கதையை 3-டி டெக்னாலஜியில் எடுக்கவுள்ளதாகக் கூறப்பட்டு வந்தது. தற்போது டோலிவுட் ஸ்டார் மகேஷ் பாபு இந்தப் படத்தின் ராமர் கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக டோலிவுட் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்தப் படம் 300 கோடி பட்ஜெட்டில் உருவாக இருப்பதாகக் கூறப்படுகிறது. இதற்கு முன்னர் ஹ்ரித்திக் ரோஷன், ராமர் கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகக் கூறப்பட்டது. ஆனால் தற்போது அவர் ராவணனாக மிரட்டுவார் என்று தெரிவிக்கப்படுகிறது.

ராமராக மகேஷ் பாபு, ராவணனாக ஹ்ரித்திக் ரோஷன், சீதையாக தீபிகா படுகோனே! எப்டி இருக்கு இந்த காம்போ!?

இந்தப் படம் குறித்த சமீபத்திய பேச்சு என்னவென்றால், நடிகை தீபிகா படுகோன் இந்தப் படத்தில் சீதையாக நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

ராமராக மகேஷ் பாபு, ராவணனாக ஹ்ரித்திக் ரோஷன், சீதையாக தீபிகா படுகோனே! எப்டி இருக்கு இந்த காம்போ!?

மகேஷ் பாபு பார்ப்பதற்கு பொலிவான முகத்தோற்றடத்துடன் இருப்பதால் அவரை ராமராக நடிக்க வைக்க தயாரிப்பாளர் விரும்பியுள்ளார். மகேஷ் பாபுவுக்கு இந்தப் படத்தில் நடிக்க விருப்பம் உள்ளதாகத் தெரிகிறது. தங்கல் படத்தை இயக்கிய நிதேஷ் திவாரி இந்தப் படத்தை இயக்கவுள்ளாராம்.

மகேஷ் பாபு தற்போது பரசுராம் இயக்கத்தில் ‘சர்காரு வாரி பாட்டா’ படத்தில் நடித்து வருகிறார்.

Share this story