பாண்டிச்சேரியில ரௌண்ட்ஸ் ஓவர் இனி சென்னையில தான் மாநாடு !

பாண்டிச்சேரியில  ரௌண்ட்ஸ் ஓவர் இனி  சென்னையில தான் மாநாடு  !

சிம்பு நடித்து வரும் மாநாடு படத்தின் பாண்டிச்சேரி படப்பிடிப்பு நிறைவடைந்துவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் ‘மாநாடு’ படத்தை சுரேஷ் காமாட்சி தயாரிக்கிறார். இப்படம் முற்றிலும் அரசியலை மையமாக வைத்து எடுக்கப்படுகிறது. இப்படத்தில் மேலும் கல்யாணி ப்ரியதர்ஷன் எஸ்ஜே சூர்யா, எஸ்ஏ சந்திரசேகர், பாரதிராஜா, பிரேம்ஜி உள்ளிட்டோரும் நடிக்கின்றனர்.

பாண்டிச்சேரியில  ரௌண்ட்ஸ் ஓவர் இனி  சென்னையில தான் மாநாடு  !

லாக்டவுனிற்கு முன் மாநாடு படப்பிடிப்பு ஹைதராபாத் ராமோஜி பிலிம் சிட்டியில் நடந்து வந்தது. தற்போது கடந்த ஒரு மாதமாக பாண்டிச்சேரியில் படப்பிடிப்பு நடந்து வருகிறது.

தற்போது பாண்டிச்சேரி பகுதி படப்பிடிப்பு நிறைவடைந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து மீண்டும் சென்னையில் படப்பிடிப்பு துவங்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

Share this story