பிரமாண்டமாக வெளியாகிறது மோகன் லாலின் ‘மரைக்கார்’ தேதியை வெளியிட்ட படக்குழு…

பிரமாண்டமாக வெளியாகிறது மோகன் லாலின் ‘மரைக்கார்’ தேதியை வெளியிட்ட படக்குழு…

அதிக பட்ஜெட்டில் எடுக்கப்பட்டுள்ள மோகன் லாலின் பிரமாண்ட படமான மரைக்கார் விரைவில் வெளியாகிறது. அதற்கான தேதியை படக்குழு வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

பொதுவாக ஹாலிவுட். பாலிவுட். கோலிவுட்டில் தான் படங்கள் பிரமாண்டமாக எடுக்கப்படும். கடைசியாக எடுக்கப்பட்ட பாகுபலி உள்ளிட்ட படங்கள் கூட மிகப்பெரிய படங்களாக எடுக்கப்பட்டு வெற்றிப்பெற்றன. தமிழில்கூட சங்கர் படங்கள் மிகவும் பிரபலமானவை. அந்தவரிசையில் மலையாள சினிமாவிலும் பிரமாண்ட படங்கள் வர தொடங்கியுள்ளன.

பிரமாண்டமாக வெளியாகிறது மோகன் லாலின் ‘மரைக்கார்’ தேதியை வெளியிட்ட படக்குழு…

இந்நிலையில் மலையாள சூப்பர் ஸ்டார் நடித்து பட்ஜெட்டில் உருவாகி இருக்கும் வரலாற்றுப் படம் ‘மரைக்கார்: அரபிக்கடலிண்டே சிம்ஹம்’. இந்தப் படத்துக்கு தமிழில், மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம் என்ற பெயரில் வெளியாகிறது.

16 ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேயர்கள், கடல் வழியாக இந்தியாவுக்கு வந்தபோது அவர்களை எதிர்த்து போராடிய குஞ்சலி மரைக்காயர் என்ற வீரரின் கதையை மையமாக வைத்து இந்தப் படம் உருவாகி இருக்கிறது. இதில், குஞ்சலி மரைக்காயராக, மோகன்லால் நடித்து இருக்கிறார்.

பிரமாண்டமாக வெளியாகிறது மோகன் லாலின் 'மரைக்கார்' தேதியை வெளியிட்ட படக்குழு...
பிரமாண்டமாக வெளியாகிறது மோகன் லாலின் ‘மரைக்கார்’ தேதியை வெளியிட்ட படக்குழு…

கீர்த்தி சுரேஷ், சுனில் ஷெட்டி, அர்ஜுன், மஞ்சு வாரியர், சித்திக் உள்பட பலர் நடிக்கிறார்கள். பிரபு, தங்காடு என்ற கேரக்டரிலும், சுஹாசினி, குஞ்சலி மரைக்காயரின் தங்கை கேரக்டரிலும், அசோக் செல்வன் அச்சுதன் என்ற வில்லன் கேரக்டரிலும் நடிக்கிறார்கள். தமிழ், மலையாளம், இந்தி உட்பட 5 மொழிகளில் படத்தை வெளியிடுகின்றனர்.

சுமார் 80கோடியில் உருவாகியுள்ள இப்படத்தில், கடலும் கப்பலும் போர்க்காட்சிகளும் என டிரைலர் மிரட்டியுள்ளதால் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. கடந்த வருடம் மார்ச் 26 ஆம் தேதி ரிலீஸ் செய்ய முடிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால் கொரோனா காரணமாக ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டது . அதனால் மீண்டும் அதே தேதியில் இந்த வருடம் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.

Share this story