கொரோனாவால் பாதிக்கப்பட்ட தொழிலார்களுக்காக இணையும் மோகன்லால் மற்றும் மம்முட்டி!

கொரோனாவால் பாதிக்கப்பட்ட தொழிலார்களுக்காக இணையும் மோகன்லால் மற்றும் மம்முட்டி!

மலையாள திரைப்பட கலைஞர்கள் சங்கம் சார்பாக நலிவடைந்த திரைத்துறை கலைஞர்களுக்காக எடுக்கப்படும் படத்தில் மோகன்லால் மற்றும் மம்மூட்டி இருவரும் இணைந்து நடிக்கவுள்ளனர்.

பிரியதர்ஷன் மற்றும் ராஜீவ் குமார் இயக்கத்தில் உருவாக இருக்கும் இந்த க்ரைம் த்ரில்லர் படத்தில் 140 நடிகர்கள் நடிக்கவுள்ளனர். கொரோனா காரணமாக திரைப்படத் துறையைச் சேர்ந்த பல தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு உதவும் வகையில் இந்தப் படம் எடுக்கப்படுகிறது. இந்தப் படத்தை ஆஷிர்வாத் சினிமாஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர்.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட தொழிலார்களுக்காக இணையும் மோகன்லால் மற்றும் மம்முட்டி!

சில தினங்களுக்கு முன்பு மலையாள திரைப்பட கலைஞர்கள் சங்கத்தின் புதிய கட்டிடம் திறப்பு விழாவில் மோகன்லால் மற்றும் மம்முட்டி இருவரும் கலந்து கொண்டனர். அதில் இந்த கிரைம் திரில்லர் படத்தின் போஸ்டர் வெளியிடப்பட்டது.

இதற்கு முன்னர் இதே போல் மலையாளத் திரையுலகைச் சேர்ந்த தொழிலாளர்களுக்கு உதவும் வகையில் 2008-ம் ஆண்டு டுவென்டி டுவென்டி என்ற படம் உருவாக்கபட்டத்து. அந்தப் படத்தில் மோகன்லால், மம்முட்டி, ஜெயராம் என்ற மலையாளத் திரையுலகின் முன்னணி நடிகர்கள் பலர் கலந்துகொண்டனர்.

தற்போது அதே போல் மீண்டும் ஒரு படம் உருவாக்கவுள்ளது. மோகன்லால் மற்றும் மம்முட்டி இணைந்து நடிக்கும் படம் என்பதால் படத்திற்கு பெரும் வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Share this story