விரைவில் விஜய், சிவகார்த்தியேன் படத்தில் பணியாற்றுவேன்… பிரபல இசையமைப்பாளர் பதிலால் ரசிகர்கள் உற்சாகம்!
இசையமைப்பாளர் எஸ் தமன், விரைவில் விஜய் மற்றும் சிவகார்த்திகேயன் படங்களில் பணியாற்றுவேன் என்று தெரிவித்துள்ளார்.
எஸ் தமன் தென்னிந்தியாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர். தமிழில் பல படங்களுக்கு இசையமைத்துள்ளார். கடைசியாக சிம்பு நடிப்பில் வெளியான ‘ஈஸ்வரன்’ படத்திற்கு தமன் தான் இசையமைத்திருந்தார். தெலுங்கில் மிகவும் பிரபலமான இருக்கும் தமன் தமிழில் பெரிய நடிகர்களின் படங்களுக்கு தற்போது வரை இசையமைக்கவில்லை என்று குறை இருந்து வருகிறது.
இந்நிலையில் தமன் நேற்று ட்விட்டரில் பயனர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார்.
அந்த கேள்வி பதில்களைப் பார்க்கலாம்.
இனி வரும் நாட்களில் தளபதி விஜயுடன் இணைந்து பணியாற்றுவீர்கள் என்று எதிர்பார்க்கலாமா?
ஆம், கண்டிப்பாக!
சூர்யா படத்திற்கு எப்போது இசையமைக்கப் போகிறீர்கள்?
சூர்யா சாரை எனக்கு மிகவும் பிடிக்கும். பன்முகத்திறமை கொண்ட அன்பான மனிதர். அவருடைய அகரம் அறக்கட்டளையை தீவிரமாகப் பின் தொடர்பவன் நான்.
தல அஜித் படத்திற்கு எப்போது இசையமைக்கப்போகிறீர்கள்?
அதற்காக வெறி கொண்டு காத்திருக்கிறேன்.
சிவகார்த்திகேயன் பற்றி ஏதாவது சொல்லுங்கள்?
எங்கள் இருவருக்கும் கிரிக்கெட் மிகவும் பிடிக்கும். விரைவில் இணைந்து பணியாற்றுவோம்.