“என் உயருக்கு ஆபத்து… முதல்வர் உதவவேண்டும்”… சீனு ராமசாமி பதிவால் கோலிவுட்டில் பரபரப்பு!

“என் உயருக்கு ஆபத்து… முதல்வர் உதவவேண்டும்”… சீனு ராமசாமி பதிவால் கோலிவுட்டில் பரபரப்பு!

இயக்குனர் சீனு ராமசாமி தனது உயிருக்கு ஆபத்து உள்ளது என்று தெரிவித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இயக்குனர் சீனு ராமசாமி கோலிவுட்டின் திறமையான இயக்குனர்களில் ஒருவர். இவர் இயக்கத்தில் வெளியான அனைத்தப் படங்களும் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெறுபவை.

“என் உயருக்கு ஆபத்து… முதல்வர் உதவவேண்டும்”… சீனு ராமசாமி பதிவால் கோலிவுட்டில் பரபரப்பு!

கூடல் நகர், தென்மேற்கு பருவக்காற்று, நீர்ப்பறவை, தர்மதுரை, கண்ணே கலைமானே ஆகிய ஐந்து படங்கள் சீனுராமசாமி இயக்கத்தில் வெளியாகி உள்ளன. மாமனிதன், இடம் பொருள் ஏவல் ஆகிய இரு படங்கள் உருவாகி வெளியாகத் தயாராக உள்ளன. சீனு ராமசாமி இயக்கியுள்ள தென்மேற்கு பருவக்காற்று படத்திற்கு தேசிய விருது கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

சீனு ராமசாமி தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் எப்போதும் ஆக்டிவாக இருப்பவர். பயனர்களின் கேள்விகளுக்கு பதிலளிப்பதோடு சமூக பிரச்சனைகள் குறித்தும் கருத்துக்கள் தெரிவித்து வருகிறார்.


இந்நிலையில் “என் உயிருக்கு ஆபத்து இருப்பதாக உணருகிறேன். முதல்வரை உதவ வேண்டும். அவசரம்” என்று சீனுராமசாமி வெளியிட்டுள்ள பதிவு கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அவரது உயிருக்கு யாரால் எந்த வகையில் ஆபத்து ஏற்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்படவில்லை. சில தினங்களுக்கு முன் விஜய் சேதுபதி ‘800’ படத்தில் இருந்து விலகவேண்டும் என்று சீனு ராமசாமி கோரிக்கை வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Share this story