சிம்பு – கௌதம் மேனன் கூட்டணியில் உருவாகும் படத்தின் டைட்டில் அறிவிப்பு !
சிம்பு-கௌதம் மேனன் கூட்டணியில் உருவாகும் படத்தின் டைட்டில் வெளியிடப்பட்டுள்ளது.
சிம்பு நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘மாநாடு’. இந்த படத்தில் நடிகை கல்யாணி பிரியதர்ஷன் ஹீரோயினாக நடிக்கிறார். அரசியலை மையமாக வைத்து உருவாகும் இந்த படத்தை வி ஹவுஸ் புரடக்ஷன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரிக்கிறார். எஸ்.ஜே.சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்த படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெறுகிறது. இதையடுத்து ‘ஜில்லுனு ஒரு காதல்’ கிருஷ்ணா இயக்கத்தில் ‘பத்து தல’ படத்தில் சிம்பு நடிக்கிறார். இதற்கான ஆரம்பக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த இரு படங்களை முடித்து கவுதம் மேனன் இயக்கத்தில் மூன்றாவது முறையாக சிம்பு நடிக்கவிருக்கிறார். இந்த படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க இருக்கிறார். இந்தப் படத்திற்கான ஆரம்பக்கட்ட பணிகள் நடந்து வருகிறது. இந்த படத்தில் ஹீரோயினாக நடிக்க வைக்க திரிஷாவிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. விண்ணைத்தாண்டி வருவாயா படத்திற்கு பிறகு திரிஷா இந்த படத்தில் சிம்புடன் நடிப்பார் என கூறப்படுகிறது.
இந்த படத்திற்கு பெயரிடப்படாமல் இருந்தது. இந்நிலையில் சிம்புவின் 47வது படமாக உருவாகும் இந்த படத்தின் டைட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு ‘நதிகளிலே நீராடும் சூரியன்’ என பெயரிடப்பட்டுள்ளது. இந்த தகவலை தனது சமூகவலைத்தளத்தில் வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷ்னல் வெளியிட்டுள்ளது.