ஜோடியாக கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட நயன்தாரா- விக்னேஷ் சிவன்!
நடிகை நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் தங்களது முதல் தவணை கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர்.
இந்தியா கொரோனாவைச் சமாளிக்க முடியாமல் திணறி வருகிறது. தற்போதைக்கு தடுப்பூசி ஒன்றே நம் முன்னிருக்கும் நம்பிக்கையாகத் திகழ்கிறது. எனவே அரசு மக்களைக் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனது.
இருப்பினும் மக்கள் மத்தியில் தடுப்பூசி குறித்த அச்சம் நிலவி வருவதால், தடுப்பூசி போட்டுக் கொள்ளத் தயங்கி வருகின்றனர். தற்போது திரைத்துறை பிரபலனங்கள் பலர் தாமாக முன்வந்து கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டு மக்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
நடிகைகள் கல்யாணி ப்ரியதர்ஷன், சாக்ஷி அகர்வால், காஜல் அகர்வால், காயத்ரி, சிம்ரன் உள்ளிட்டோர் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர்.
தற்போது நடிகை நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் முதல் தவணை கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர். அந்தப் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதற்கிடையில் நயன்தாரா சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினி உடன் ‘அண்ணாத்த’ படத்தில் நடித்து வருகிறார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ படத்திலும் நடித்து வருகிறார்.