படக்குழுவே கட்டுப்பாட்டில் இருக்கும்போது சிவன்-நயன் ஜோடி சந்தித்தது எப்படி ?

படக்குழுவே கட்டுப்பாட்டில் இருக்கும்போது சிவன்-நயன் ஜோடி சந்தித்தது எப்படி ?

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகவுள்ள ”அண்ணாத்த” திரைபடத்தில் நடிகை நயன்தாரா ரஜினியின் மனைவியாகவும், கீர்த்தி சுரேஷ் ரஜினிக்கு சகோதரியாகவும் நடிக்கின்றனர். இதனால் நயன்தாரா தற்போது ஹைதராபாத்தில் அண்ணாத்த படப்பிடிப்பில் ஈடுபட்டுள்ளார்.

அதேசமயம் நயன்தாராவின் காதலரான இயக்குனர் விக்னேஷ் சிவனின் ”காத்துவாக்குல ரெண்டு காதல்” படத்தின் படப்பிடிப்பும் தற்போது ஹைதராபாதில் தான் நடந்து கொண்டிருக்கிறது.இப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதியுடன், நடிகை நயன்தாரா மற்றும் சமந்தா இணைந்து நடிக்கின்றனர். ஆனால் நயன்தாரா தற்போது அண்ணாத்த படப்பிடிப்பில் உள்ளதால் காதலரின் படப்பிடிப்பில் பங்கேற்க முடியவில்லை.

படக்குழுவே கட்டுப்பாட்டில் இருக்கும்போது சிவன்-நயன் ஜோடி சந்தித்தது எப்படி ?

மேலும் அண்ணாத்த படப்பிடிப்பில் ”பையோ பப்பிள்” என்கிற பாதுகாப்பு முறை பின்பற்றப்பட்டு வருவதால் அவர்கள் இருவரும் சந்திக்கக்கூட முடிவதில்லை என கூறப்பட்டது.

படக்குழுவே கட்டுப்பாட்டில் இருக்கும்போது சிவன்-நயன் ஜோடி சந்தித்தது எப்படி ?

”பையோ பப்பிள்” முறையில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் இருப்பவர்களுடன் வெளியில் இருப்பவர்கள் நேரில் தொடர்புகொள்ள முடியாது. அதுபோல சாப்பாடு உட்பட எந்தவித பொருட்களையும் வெளியிலிருந்து கொண்டு வர முடியாது.

ஆனால் தற்போது விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா நெருக்கமாக இருக்கும் புதிய புகைப்படம் ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தில் விக்னேஷ் சிவன், நயன்தாரா, விஜய் சேதுபதி மற்றும் காத்துவாக்குல ரெண்டு காதல் படக்குழுவினர் ஒரு ஹோட்டலில் ஒன்றாக சாப்பிடுகின்றனர்.

”பையோ பப்பிள்” முறை பின்பற்றப்படும்போது இந்த காதல்ஜோடிகள் மட்டும் எப்படி கூண்டில் இருந்து வெளியே பறந்துவந்தது என்பது பற்றிய விவரம் ஏதும் தெரியவில்லை.

Share this story