காதலருடன் கைகோர்த்து ஹைதராபாத் ஏர்போட்டில் நயன்தாரா !

காதலருடன்  கைகோர்த்து ஹைதராபாத் ஏர்போட்டில்  நயன்தாரா !

அண்ணாத்த படப்பிடிப்பு ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் பரபரப்பாக நடைபெற்று வந்த நிலையில் படப்பிடிப்பு தளத்தில் 8 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதால் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

காதலருடன்  கைகோர்த்து ஹைதராபாத் ஏர்போட்டில்  நயன்தாரா !

இருப்பினும் படப்பிடிப்பில் கலந்து கொண்ட நடிகர் ரஜினி,நயன்தாரா,மீனா,குஷ்பூ உட்பட பலருக்கும் கொரோனா தொற்று உள்ளதா என்பதை உறுதிசெய்ய பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் நட்சத்திரங்கள் அனைவருக்கும் கொரோனா தொற்று இல்லை என உறுதிசெய்யப்பட்டது. இதனால் அனைவரும் அவர்கள் சொந்த ஊருக்கு திரும்பி வருகின்றனர். நடிகர் ரஜினிகாந்த் மட்டும் ஹைதராபாதில் தன்னை மருத்துவமனையில் தனிமைப் படுத்திக்கொண்டுள்ளார்.

காதலருடன்  கைகோர்த்து ஹைதராபாத் ஏர்போட்டில்  நயன்தாரா !

இந்நிலையில் நடிகை நயன்தாரா, விக்னேஷ் சிவனுடன் கைகோர்த்து ஹைதராபாத் ஏர்போட்டில் செல்லும்போது எடுக்கப்பட்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இயக்குனர் சிவன் தற்போது காத்துவாக்குல ரெண்டு காதல் படப்பிடிப்பில் ஈடுபட்டுள்ளார் .அந்த படப்பிடிப்பும் நிறுத்தப்பட்டுள்ளதாக எந்த தகவலும் வரவில்லை.இருப்பினும் காதலி நயன்தாராவை விக்னேஷ் பத்திரமாக கூப்பிட்டு ஊர் திரும்புகிறார்.

Share this story