ஓடிடியில் வெளியாகும் ‘நெஞ்சம் மறப்பதில்லை’ விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

ஓடிடியில் வெளியாகும் ‘நெஞ்சம் மறப்பதில்லை’ விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

செல்வராகவனின் நெஞ்சம் மறப்பதில்லை படம் நேரடியாக ஓடிடியில் விரைவில் வெளியாகிறது.

செல்வராகவன் படம் என்றாலே, அதற்கு தனி ரசிகர் கூட்டம் இருக்கும். கடைசியாக என்ஜிகே திரைப்படத்திற்கு பிறகு செல்வராகவன் எந்த திரைப்படத்தை இயக்குவார் என ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனார். இந்நிலையில் தனுஷ் நடிப்பில் ஆயிரத்தில் ஒருவன் பாகம்-2 இயக்குவதாக சமீபத்தில் அவரே அறிவித்தார்.

ஆயிரத்தில் ஒருவன் பாகம்-2 அப்டேட் சூடே இன்னும் தணியாத நிலையில், செல்வராகவனின் நெஞ்சம் மறப்பதில்லை திரைப்படம் ஓடிடியில் வெளியாக தயாராகி வருகிறது.

ஓடிடியில் வெளியாகும் ‘நெஞ்சம் மறப்பதில்லை’ விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

தமிழ் சினிமாவை பொறுத்தவரையிலும் ஒரு சில கூட்டணி வெற்றி அமைந்து விட்டால் ரசிகர்கள் மீண்டும் மீண்டும் அதே கூட்டணியை எதிர்பார்த்து வருவது வழக்கமான ஒன்றுதான் அந்த வகையில் செல்வராகவன்,யுவன் சங்கர் ராஜா, தனுஷ் கூட்டணி என்பது தமிழ் ரசிகர்களுக்கு மிகவும் ஃபேவரிட் கூட்டணியாகும்.

வழக்கமாக செல்வராகவனின் திரைப்படங்கள் எந்த ஒரு தடையுமின்றி குறிப்பிட்ட நாளில் கச்சிதமாக வெளியாகி வந்த நிலையில் இப்பொழுது எஸ் ஜே சூர்யா, ரெஜினா கெஸன்ட்ரா மற்றும் நந்திதா ஸ்வேதா ஆகியோர் இணைந்து நடித்திருந்த நெஞ்சம் மறப்பதில்லை திரைப்படத்தின் டீஸர் வெளியாகி சக்கைப்போடு போட்ட நிலையில் இன்று வரை வெளியாக முடியாமல் சில ஆண்டுகளாகவே திரைப்படம் கிடப்பில் போடப்பட்டிருந்தது.

ஓடிடியில் வெளியாகும் ‘நெஞ்சம் மறப்பதில்லை’ விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

இந்நிலையில் கொரனா காலத்தில் பலரும் ஓடிடியில் திரைப்படங்களை வெளியிடுவதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த நிலையில்தான் செல்வராகவனின் நெஞ்சம் மறப்பதில்லை திரைப்படமும் இப்பொழுது ஓடிடில் வெளியாக உள்ளதாக சில நம்பத்தகுந்த வட்டாரங்கள் மூலம் இந்த செய்தி கசிந்துள்ளது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிகிறது.

Share this story