உனக்கு என்ன பிரச்சன… சனம் மீது நிஷா பாய்ச்சல்!

உனக்கு என்ன பிரச்சன… சனம் மீது நிஷா பாய்ச்சல்!

பரபரப்பாக நடந்து பிக்பாஸ் நிகழ்ச்சியை நிவர் புயல் சற்று அசைத்துவிட்டது. பிக்பாஸ் வீட்டிற்குள் தண்ணீர் புகுந்ததால் போட்டியாளர்கள் அனைவரும் வேறு இடத்தில் இரவு தங்க வைக்கப்பட்டனர். பின்னர் தண்ணீர் முழுவதையும் வெளியேற்றிய பின்னர் போட்டியாளர்கள் மீண்டும் வீட்டிற்குள் அழைத்து வரப்பட்டனர்.

உனக்கு என்ன பிரச்சன… சனம் மீது நிஷா பாய்ச்சல்!

தற்போது வீட்டிற்குள் மீண்டும் சகஜ நிலை திரும்பியுள்ளது. வாராவாரம் ஆரவாரம் என மீண்டும் போட்டியாளர்கள் மோதலில் ஈடுபட ஆரம்பித்துள்ளனர்.

தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில் இந்த வாரம் வீட்டில் சரியாக ஒத்துழைப்பை அளிக்காத இருவரை பிக்பாஸ் தேர்ந்தெடுக்கச் சொன்னார். போட்டியாளர்கள் ரியோவையும் ஆரியையும் தேர்ந்தெடுக்கின்றனர்.

இதற்கிடையில் சனம், “ரியோ ஆரி இருவரும் நாமினேட் ஆனதில் பெர்சனல் விஷயம் இருக்கு பிக்பாஸ்” என்று சொல்ல கொதித்தெழுந்த நிஷா “உனக்கென்ன பிரச்சினை” என்று சீறுகிறார்.

இந்த பிரச்சினைக்கெல்லாம் ஒரே என்ட் இல்லையா என்று ஆடியன்ஸ் கடுப்பாகி வருகின்றனர்.

Share this story