மலையாள த்ரில்லர் படத்தில் நயன்தாரா… மார்ச்சில் ரிலீஸ்…

மலையாள த்ரில்லர் படத்தில் நயன்தாரா…  மார்ச்சில் ரிலீஸ்…

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்கும் த்ரில்லர் படம் மார்ச் மாதம் வெளியாகிறது.

தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் பிசியாக நடித்துக் கொண்டிருப்பவர் நயன்தாரா. இவர் தற்போது கதாநாயகி முக்கியஸ்துவம் தரும் படங்களில் மட்டும் நடித்து வருகிறார். கடைசியான இவர் நடித்து வெளியான படம் மூக்குத்தி அம்மன். அம்மனாக நயன்தாரா நடித்துள்ள இப்படம் நேரடியாக ஓடிடியில் ரிலீசானது.

மலையாள த்ரில்லர் படத்தில் நயன்தாரா…  மார்ச்சில் ரிலீஸ்…

இதையடுத்து சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கும் அண்ணாத்த, விக்னேஷ் சிவன் இயக்கும் காத்து வாக்குல ரெண்டு காதல் உள்ளிட்ட படங்களில் நடிக்கிறார். இவர் நடித்து முடித்திருக்கும் நெற்றிக்கண் படம் ரிலீசுக்கு தயாராக இருக்கிறது.

மலையாள த்ரில்லர் படத்தில் நயன்தாரா…  மார்ச்சில் ரிலீஸ்…

இந்நிலையில் நயன்தாரா நிழல் என்ற த்ரில்லர் படத்தில் நடிக்கிறார். குஞ்சாக்கோ போபன் ஹூரோவாக நடிக்கும் இப்படத்தை அப்பு இயக்குகிறார். படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து முடிந்துள்ள இப்படத்தில் ஹூரோயினுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.

மலையாள த்ரில்லர் படத்தில் நயன்தாரா…  மார்ச்சில் ரிலீஸ்…

கொரோனா காரணமாக சம்பளத்தை குறைத்துக் கொள்ளும்படி மலையாள தயாரிப்பாளர் சங்கம் கோரிக்கை விடுத்திருந்தது. அதன் இந்த படத்தின் சம்பளத்தை குறைத்துள்ளார் நயன்தாரா. இந்த படம் திட்டமிட்டப்படி மார்ச் 4ம் தேதி ரிலீசாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

Share this story