மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்ததற்கு எழுந்த பிரச்சனைகள்… ஒரே வார்த்தையில் பதிலளித்துள்ள ஓவியா!

மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்ததற்கு எழுந்த பிரச்சனைகள்… ஒரே வார்த்தையில் பதிலளித்துள்ள ஓவியா!

பிரதமர் மோடி சென்னை வருகைக்கு எதிராக கருத்து தெரிவித்ததற்கு எழுந்த பிரச்சனைகளுக்கு நடிகை ஓவியா பதிலளித்துள்ளார்.

பிரதமர் மோடி சமீபத்தில் சென்னைக்கு வருகை தந்த போது பலர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர். இதே பல காலமாக தொடர்ந்து நடந்து வருகிறது. நடிகை ஓவியாவும் #GobackModi என்ற ஹாஷ்டாக்கை பதிவிட்டார். அந்தப் பதிவு இணையத்தில் வைரலானது. இதுகுறித்து பல செய்திகளும் வெளியானது.

அதையடுத்து தமிழக பாஜக கட்சியைச் சேர்ந்தோர் நாட்டில் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க பல பிரச்சினைகளை உருவாக்கி வருவதாகவும், பிரதமர் மோடியை குறிவைத்து வருவதாகவும் குற்றம் சாட்டி ஓவியா மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சைபர் கிரைம் பிரிவில் வழக்கு பதிவு செய்தனர்.

மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்ததற்கு எழுந்த பிரச்சனைகள்… ஒரே வார்த்தையில் பதிலளித்துள்ள ஓவியா!

இந்த சர்ச்சைகளுக்கு பதிலளிக்கும் விதமாக தற்போது ஓவியா ஒரே வார்த்தையில் பதிவிட்டுள்ளார். ஜெய் ஹிந்த், கருத்துச் சுதந்திரம் என்று பதிவிட்டுள்ளார்.

Share this story