”பாண்டியன் ஸ்டோர்ஸில் இனி சித்ராவுக்கு பதில் நானா??..” உண்மையை உடைத்த தோழி..

”பாண்டியன்  ஸ்டோர்ஸில் இனி சித்ராவுக்கு பதில் நானா??..” உண்மையை உடைத்த  தோழி..

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் சித்ராவுக்கு பதிலாக தான் நடிப்பதாக வெளியான செய்தியில் உண்மையில்லை என நடிகை சரண்யா துராடி தெரிவித்துள்ளார்.

பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், சீரியல்களில் நடித்து சின்னத்திரையில் துருதுருவென வலம் வந்தவர் நடிகை சித்ரா.. இவர் கடைசியாக பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் நடித்து மிகப் பிரபலமானார். அதில் முல்லையாக அனைவர் மனதிலும் காலூன்றிய நடிகை சித்ரா திடீரென மூன்று நாட்களுக்கு முன்னர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
”பாண்டியன்  ஸ்டோர்ஸில் இனி சித்ராவுக்கு பதில் நானா??..” உண்மையை உடைத்த  தோழி..
இது ஒருபுறமிருக்க பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில், அவர் நடித்துக் கொண்டிருந்த முல்லை கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க வேறு நடிகைகளை சீரியல் குழுவினர் தேட ஆரம்பித்துள்ளனராம். சித்ராவுக்கு பதில் மற்றொரு நடிகையான சரண்யா துராடி நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகின.

”பாண்டியன்  ஸ்டோர்ஸில் இனி சித்ராவுக்கு பதில் நானா??..” உண்மையை உடைத்த  தோழி..

தற்போது இதற்கு பதிலளித்துள்ள சரண்யா துராடி, அந்த செய்தியில் உண்மையில்லை என தெரிவித்துள்ளார். இதுகுறித்து இன்ஸ்டகிராமில் பதிவிட்டுள்ள அவர், ”முல்லை கதாப்பாத்திரத்தை ரீபிளேஸ் செய்ய முடியும் என்கிற நம்பிக்கையில்லை. தனது நேர்த்தியான நடிப்பின் மூலம் முல்லை என்ற அங்கீகாரத்தை பெற்றிருக்கிறார். அதை நான் மதிக்கிறேன்.. அதைவிட அதிகமாக நேசிக்கிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by SHARANYA TURADI (@sharanyaturadi_official)

Share this story