தமிழ்நாடு அரசு பள்ளி தலைமை ஆசிரியரை பாராட்டிய பிரியங்கா சோப்ரா!

தமிழ்நாடு அரசு பள்ளி தலைமை ஆசிரியரை பாராட்டிய பிரியங்கா சோப்ரா!

பிரியங்கா சோப்ரா சினிமாவில் நுழைந்து 20 ஆண்டுகளுக்கு மேலாகி விட்டன. படங்களில் மட்டுமில்லாமல் நிஜ வாழ்விலும் எண்ணற்ற சாதனைகளை நிகழ்த்தி காட்டியிருக்கிறார். அனைத்திற்கும் அவரது கடின உழைப்புதான் காரணம் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. தென்னிந்திய நடிகை, பாலிவுட் நடிகை என்று இருந்த அவர் இப்போது சர்வதேச நடிகையாக உருவெடுத்துள்ளார்.
தமிழ்நாடு அரசு பள்ளி தலைமை ஆசிரியரை பாராட்டிய பிரியங்கா சோப்ரா!
ஹாலிவுட் நடிகர் மற்றும் தயாரிப்பாளர் நிக் ஜோனாசை திருமணம் செய்து கொண்டு ஹாலிவுட்டில் செட்டில் ஆகிவிட்டார் பிரியங்கா. தற்போது ஹாலிவுட் படங்களில் நடிப்பதில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.
சோசியல் மீடியாக்களில் ஆக்டிவாக இருந்து வரும் பிரியங்கா சோப்ரா தொடர்ந்து சமூக அக்கறையுள்ள நபர்களைக் குறிப்பிட்டு பாராட்டி வருகிறார். அந்த வகையில் தற்போது அரசு பள்ளி தலைமையாசிரியர் ஒருவரைப் பாராட்டியுள்ளார் பிரியங்கா.
தமிழ்நாடு அரசு பள்ளி தலைமை ஆசிரியரை பாராட்டிய பிரியங்கா சோப்ரா!
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள அரசு பள்ளி தலைமையாசிரியர் ஜெயக்குமார் ஜான்ராஜ் புதிதாக சேரும் மாணவர்களுக்கு புதிய ஸ்மார்ட்போன் வாங்கி கொடுத்து வருகிறார். இதன் மூலம் ஆன்லைன் வகுப்பில் பங்குபெற முடியாத மானவர்க்ளின் படிப்பு கெட்டுவிடாமல் பார்த்துக்கொள்கிறார். மேலும் மாணவர்கள் அரசு பள்ளிகளில் சேர்வதை ஊக்குவித்தும் வருகிறார்” என்று பிரியங்கா சோப்ரா தெரிவித்துள்ளார்.
 
 

Share this story