”எனது உலகத்திற்கு திரும்பிவிட்டேன்” – செல்வராகவன் ட்விட்டால் ரசிகர்கள் மகிழ்ச்சி!

”எனது உலகத்திற்கு திரும்பிவிட்டேன்” – செல்வராகவன் ட்விட்டால் ரசிகர்கள் மகிழ்ச்சி!

ஸ்டில்ஸ் ஷூட்டிங்கை தொடங்கிவிட்டேன் என்று ட்விட்டரில் புகைப்படம் வெளியிட்டு செல்வராகவன் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

”எனது உலகத்திற்கு திரும்பிவிட்டேன்” – செல்வராகவன் ட்விட்டால் ரசிகர்கள் மகிழ்ச்சி!

தமிழ் சினிமாவில் தனக்கென்று தனி இடத்தை வைத்திருப்பவர் செல்வராகவன். இவர் இயக்கும் படங்கள் தனித்துவமான இருக்கும் என்பது திரையுலகினர் அறிந்த உண்மையே.முதல்முதலில் இவர் தனுஷை வைத்து இயக்கிய படம் காதல் கொண்டேன், பிறகு புதுப்பேட்டை, மயக்கம் என்ன போன்ற படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன. 

”எனது உலகத்திற்கு திரும்பிவிட்டேன்” – செல்வராகவன் ட்விட்டால் ரசிகர்கள் மகிழ்ச்சி!

இவர்கள் இருவரும் தற்போது 10 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் இணைந்து பணியாற்ற உள்ளனர். இப்படத்தை வி கிரியேசன்ஸ் தாணு தயாரிக்கிறார். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். கடைசியாக புதுப்பேட்டை படத்தில் இணைந்து பணியாற்றிய தனுஷ் – செல்வராகவன் – யுவன் கூட்டணியே தற்போது மீண்டும் இணைந்துள்ளது என்ற தகவல் ரசிகர்களுக்கு கூடுதல் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

”எனது உலகத்திற்கு திரும்பிவிட்டேன்” – செல்வராகவன் ட்விட்டால் ரசிகர்கள் மகிழ்ச்சி!

இந்நிலையில் தனது ட்விட்டரில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார் செல்வராகவன். அதில் ஸ்டில்ஸ் ஷூட்டிங் தொடங்கி உள்ளது போன்று புகைப்படம் இடம்பெற்றுள்ளது. அது பற்றி அவர் வெளியிட்டுள்ள பதிவில், “மீண்டும் எனது உலகத்திற்கு திரும்பிவிட்டேன்” என குறிப்பிட்டுள்ளார். பொங்கலுக்கு இப்படத்தின் டீசர் வெளியாகும் என தெரிகிறது.

இப்படம் முடிந்த பிறகு மீண்டும் செல்வராகவனுடன் இணைய உள்ள நடிகர் தனுஷ், ஆயிரத்தில் ஒருவன் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க உள்ளார். பிரம்மாண்டமாக தயாராக உள்ள இப்படத்தை 2024-ம் ஆண்டு வெளியிட உள்ளனர் குறிப்பிடத்தக்கது.

Share this story