‘ஏதோ மறு ஜென்மம் எடுத்தது போன்ற உணர்வு’ – நடிகை ராய் லட்சுமி

‘ஏதோ மறு ஜென்மம் எடுத்தது போன்ற உணர்வு’ – நடிகை ராய் லட்சுமி

நாம் உயிரோடு இருப்பதே பெரிய விஷயம் என்ற அளவுக்கு வாழ்க்கை மாறிவிட்டது என கொராவால் பாதிக்கப்பட்ட நடிகை ராய் லட்சுமி தெரிவித்துள்ளார்.

‘ஏதோ மறு ஜென்மம் எடுத்தது போன்ற உணர்வு’ – நடிகை ராய் லட்சுமி

தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் ரவுண்டுக்கட்டி நடித்து வருகிறார் நடிகை ராய் லஷ்மி. சமீபத்தில் கொரானாவால் பாதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பெற்று குணமானார். சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் ராய் லட்சுமி சமீபகாலமாக அமைதியாக இருந்து வந்தார்.

‘ஏதோ மறு ஜென்மம் எடுத்தது போன்ற உணர்வு’ – நடிகை ராய் லட்சுமி

தற்போது கொரானாவிலிருந்து பூரண குணமடைந்த ராய் லட்சுமி பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் கொரானா நிறைய பாடங்களை எல்லோருக்கும் கற்றுக்கொடுத்துள்ளது. சமூகத்தில் எதை செய்யவேண்டும், செய்யக்கூடாது என்பதை உணர வைத்துள்ளது. பிரபலங்கள் தங்களால் முடிந்த உதவியை தாராளமாக மற்றவர்களுக்கு செய்யவேண்டும்.

‘ஏதோ மறு ஜென்மம் எடுத்தது போன்ற உணர்வு’ – நடிகை ராய் லட்சுமி

எதையெல்லாம் நம் வாழ்க்கையில் மறந்தோமோ அதையெல்லாம் கொரானா நமக்கு ஞாபகப்படுத்தியிருக்கிறது. ஏன் கொரானா வந்தது என்பதை திட்டுவதை விட்டுவிட்டு, கொரானாவால் நமக்கு ஏற்பட்ட சில நல்ல விஷயங்களை நினைவில் கொள்ளவேண்டும். எல்லோரும் எதோ மறு ஜென்மம் எடுத்தது போன்ற உணர்வு ஏற்பட்டுள்ளது. நாம் உயிரோடு இருப்பதே பெரிய விஷயம் என்று சந்தோஷப்படுகிற அளவுக்கு நமது வாழ்க்கை மாறியுள்ளது என்று ராய் லட்சுமி கூறியுள்ளார்.

Share this story