அண்ணாத்த ஷூட்டிங் மீண்டும் துவங்குகிறதா ?… …சூடுபறக்கும் அப்டேட்…

அண்ணாத்த ஷூட்டிங் மீண்டும் துவங்குகிறதா ?…  …சூடுபறக்கும் அப்டேட்…

ரஜினி நடிக்கும் ‘அண்ணாத்த’ படத்தின் ஷூட்டிங் எப்போது துவங்குகிறது என்ற தகவல் வெளியாகியுள்ளது.

அண்ணாத்த ஷூட்டிங் மீண்டும் துவங்குகிறதா ?…  …சூடுபறக்கும் அப்டேட்…

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினி நடிக்கும் படம் தர்பார். சிறுத்தை சிவா இயக்கும் இப்படத்தில் டி இமான் இசையமைக்கிறார். இப்படத்தில் நயன்தாரா, குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ் என ஒரு நட்சத்திர பட்டாளமே நடிக்கிறது.கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட இந்த படத்தின் ஷூட்டிங் கொரோனாவால் நிறுத்தப்பட்டது.

அண்ணாத்த ஷூட்டிங் மீண்டும் துவங்குகிறதா ?…  …சூடுபறக்கும் அப்டேட்…

அதன்பிறகு டிசம்பர் மாதம் தொடங்கிய ஷூட்டிங் ஒரு வாரம் நடந்தப்பட்டது. அப்போது படக்குழுவினருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் 4 பேருக்கு கொரோனா தொற்று இருந்ததை தொடர்ந்து ஷூட்டிங் நிறுத்தப்பட்டது. ரஜினிக்கும் உடல்நிலை பாதிக்கப்பட்டதால் ஒய்வில் இருந்து வந்தார். இதைத்தொடர்ந்து இயக்குனர் சிவா, ரஜினியை சந்தித்து மீண்டும் படத்தை துவங்குவது குறித்து கடந்த மாதம் ஆலோசனை நடத்தினார்.

அண்ணாத்த ஷூட்டிங் மீண்டும் துவங்குகிறதா ?…  …சூடுபறக்கும் அப்டேட்…

இதையடுத்து அண்ணாத்த படம் வரும் நவம்பர் 4ம் தேதி தீபாவளியை முன்னிட்டு வெளியாகும் என சன் பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.இந்நிலையில் அண்ணாத்த ஷூட்டிங் மீண்டும் துவங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வரும் மார்ச் 15-ம் தேதி தொடங்கும் ஷூட்டிங், முதற்கட்டமாக சென்னையில் நடைபெறுகிறது. இதற்காக பிரம்மாண்ட அரங்குகள் அமைக்கப்பட்டு காட்சிகள் படமாக்கப்படுகிறது. அதன்பிறகு கிளைமேக்ஸ் காட்சிகள் கோவை மற்றும் பொள்ளாச்சியில் உள்ளிட்ட பகுதிகளில் படமாக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Share this story