கொரோனா நேரத்தில் வேலையில்லாத ஊழியர்களுக்கும் சம்பளம் வழங்கி மனம் கவர்ந்த நடிகை!

கொரோனா நேரத்தில் வேலையில்லாத ஊழியர்களுக்கும் சம்பளம் வழங்கி மனம் கவர்ந்த நடிகை!

போன வருடம் முதல் தற்போதைய நாள் வரை உலகம் கொரோனாவால் அடைந்த இன்னல்கள் கொஞ்சம் நஞ்சமல்ல. கோடிக்கணக்கான மக்களின் வாழ்வாதாரத்தை அசைத்துப் பார்த்தது கொரோனா. லட்சக்கணக்கான மக்களின் உயிரையும் பறித்தது.

தற்போது நடிகை ரகுல் ப்ரீத் சிங் தனக்கு கொரோனாவால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து மனம் திறந்துள்ளார். ரகுல் ப்ரீத் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு பின்னர் சில நாட்கள் சுய தனிமையில் இருந்தார். லாக்டவுனால் அவர் நடத்தில் ஜிம் வணிகங்களும் பெரிதளவில் பாதிப்படைந்தன. இருப்பினும் அவர் தன்னுடைய ஊழியர்களுக்கு ஊதியத்தை தவறாமல் வழங்கி வந்துள்ளார்.

கொரோனா நேரத்தில் வேலையில்லாத ஊழியர்களுக்கும் சம்பளம் வழங்கி மனம் கவர்ந்த நடிகை!

ரகுல் ஹைதராபாத் மற்றும் விசாகப்பட்டினம் என இரண்டு இடங்களில் ஜிம் வைத்து நடத்தி வருகிறார். லாக்டவுனால் ஜிம்கள் திறக்கப்படாததால் அவரது ஊழியர்கள் அனைவரும் வேலை இல்லாமல் இருந்தனர்.

சமீபத்தில், நேர்காணலில் பேசிய ரகுல், தான் நிதி நெருக்கடி இருந்தபோதிலும், அனைத்து ஊழியர்களுக்கும் சரியான நேரத்தில் ஊதியம் வழங்குவதை உறுதிசெய்ததாகக் கூறினார்.

கொரோனா நேரத்தில் வேலையில்லாத ஊழியர்களுக்கும் சம்பளம் வழங்கி மனம் கவர்ந்த நடிகை!

தற்போது அவருடைய ஜிம் தொழில் மெல்ல இயல்பு நிலைக்குத் திரும்பி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இழந்த வேகத்தில் அதன் போக்கை மீண்டும் அடைந்துவிடும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார் அவர்.

ரகுல் ப்ரீத் தற்போது தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழிப படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.

Share this story