மரணத்திலிருந்து திரும்பி வந்திருக்கிறேன்… ராணாவின் கதையைக் கேட்டு கண்கலங்கிய சமந்தா!

மரணத்திலிருந்து திரும்பி வந்திருக்கிறேன்… ராணாவின் கதையைக் கேட்டு கண்கலங்கிய சமந்தா!

சமந்தா தொகுத்து வழங்கி வரும் சாம் ஜாம் என்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடிகர் ராணா தனது உடல்நிலை பற்றி பேசியபோது அனைவரும் கண்கலங்கிய சம்பவம் நேர்ந்துள்ளது.

கடந்த ஆண்டு, நடிகர் ராணாவின் உடல்நிலை மோசமானதாக செய்திகள் வெளியாகின. அவரின் கடுமையான எடை குறைவு மற்றும் அதிர்ச்சியூட்டும் மெலிந்த தோற்றம் ஆகியவை அந்த செய்திகளை உறுதியாக்குவது போல் அமைந்தது.

மரணத்திலிருந்து திரும்பி வந்திருக்கிறேன்… ராணாவின் கதையைக் கேட்டு கண்கலங்கிய சமந்தா!

ராணாவுக்கு கடுமையான சிறுநீரக பிரச்சினைகள் இருப்பதாகவும், அதற்காக அமெரிக்கா சென்று சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டதாகவும் கூறப்பட்டது. ராணாவின் தாய் தனது சிறுநீரகங்களில் ஒன்றை ராணாவிற்கு நன்கொடையாக வழங்கியதாகவும், மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது.

அப்போது ராணாவின் தந்தை சுரேஷ் பாபு, இந்த சிறுநீரக மாற்று செய்திகள் யாவும் வதந்தி என்று கூறினாலும், ராணாவின் உடல்நிலை குறித்து எந்த அறிக்கையும் கொடுக்கவில்லை.

இந்நிலையில் ​​கிட்டத்தட்ட ஒரு வருடம் கழித்து, ராணா தனது உடல்நிலை குறித்து அதிர்ச்சியூட்டும் விவரங்களை வெளிப்படுத்தியுள்ளார்.

ஆஹா ஓடிடி தளத்திற்காக சமந்தா சாம் ஜாம் என்ற நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கி வருகிறார்.

மரணத்திலிருந்து திரும்பி வந்திருக்கிறேன்… ராணாவின் கதையைக் கேட்டு கண்கலங்கிய சமந்தா!

அதன் இரண்டாவது எபிசோடில் ராணா மற்றும் மகாநதி படத்தின் இயக்குனர் நாக் அஸ்வின் ஆகியோர் விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர். அந்நிகழ்ச்சியில் பேசிய ராணா

“நான் பிறந்ததிலிருந்து எனக்கு உயர் இரத்த அழுத்தம் உள்ளது. ஒரு கட்டத்தில், எனது சிறுநீரகங்கள் இரண்டுமே சேதமடைந்துவிட்டன. எனக்கு பக்கவாதம் அல்லது ரத்தக்கசிவு ஏற்படுவதற்கான 70 சதவீத வாய்ப்பு இருப்பதாகவும், எனது மரணத்திற்கு 30 சதவீதம் இருப்பதாகவும் மருத்துவர்கள் என்னிடம் கூறினர்.

“நான் வேகமாக முன்னேறி வந்துகொண்டிருந்த போது என் வாழ்க்கையில் இந்த நிகழ்வு வேகத்தடையாய் அமைந்தது.

இதைக் கேட்ட சமந்தாவும், பார்வையாளர்களும் கண்கலங்கினர். முழு நிகழ்ச்சியும் வெளியானதும் மேலும் விவரங்கள் தெரிய வரக்கூடும்.

ராணா இப்போது பூரண உடல்நலத்துடன் இருக்கிறார். தனது காதலி மிஹீகா பஜாஜைத் திருமணம் செய்து மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்.

Share this story