லாரன்ஸ் நடிக்கும் ‘ருத்ரன்’‌ படப்பூஜையுடன் தொடங்கியது ஷூட்டிங்…

லாரன்ஸ் நடிக்கும் ‘ருத்ரன்’‌ படப்பூஜையுடன் தொடங்கியது ஷூட்டிங்…

நடிகர் ராகவா லாரன்ஸ் நடிக்கும் ‘ருத்ரன்’ படத்தின் ஷூட்டிங் படப்பூஜையுடன் இன்று துவங்கியது.

நடிப்பிலும், டைரக்ஷனிலும் பிஸியாக உள்ள நடிகர் ராகவா லாரன்ஸ். தமிழில் அவர் இயக்கி வெற்றி பெற்ற காஞ்சனா படத்தை இந்தியிலும் லட்சுமி என்ற பெயரில் இயக்கியிருந்தார். பாலிவுட் ஹீரோ அக்ஷய்குமார் நடித்த அந்த படம் இந்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றது.

லாரன்ஸ் நடிக்கும் ‘ருத்ரன்’‌ படப்பூஜையுடன் தொடங்கியது ஷூட்டிங்…

இதையடுத்து பி வாசு இயக்கத்தில் சந்திரமுகி 2 படத்திலும் நடித்து முடித்துள்ளார். இந்தப் படம் விரைவில் திரைக்கு வர உள்ளது.

லாரன்ஸ் நடிக்கும் ‘ருத்ரன்’‌ படப்பூஜையுடன் தொடங்கியது ஷூட்டிங்…

அடுத்து ராகவா லாரன்ஸ் நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு ஏற்கனவே வெளியிடப்பட்டிருந்தது. ருத்ரன் என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தினை அறிமுக இயக்குனர் பைவ் ஸ்டார் கதிரேசன் இயக்க உள்ளார். இவர் பொல்லாதவன், ஆடுகளம், ஜிகிர்தண்டா உள்ளிட்ட படங்களை தயாரித்தவர். லாரன்ஸ்க்கு ஜோடியாக ப்ரியா பவானி சங்கர் ஹீரோயினாக நடிக்கிறார்.

லாரன்ஸ் நடிக்கும் ‘ருத்ரன்’‌ படப்பூஜையுடன் தொடங்கியது ஷூட்டிங்…

ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு, படப்பூஜையுடன் இன்று தொடங்கியது. இதில் நடிகர் லாரன்ஸ், நடிகை ப்ரியா பவானி சங்கர், இயக்குனர் கதிரேசன், ஜி.வி.பிரகாஷ், பூர்ணிமா பாக்கியராஜ் உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர்.

Share this story