பிரசாந்த் படத்தில் போலீஸ் அதிகாரியாக மிரட்டும் சமுத்திரக்கனி!

பிரசாந்த் படத்தில் போலீஸ் அதிகாரியாக மிரட்டும் சமுத்திரக்கனி!

பிரசாந்த் நடிப்பில் உருவாகிவரும் ‘அந்தகன்’ படத்தில் நடிகர் சமுத்திரக்கனி இணைந்துள்ளார்.

பாலிவுட்டில் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் ஆயுஷ்மான் குர்ரானா நடிப்பில் வெளியான ‘அந்தாதுன்’ திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது.

பிரசாந்த் படத்தில் போலீஸ் அதிகாரியாக மிரட்டும் சமுத்திரக்கனி!

அதையடுத்து அந்தப் படம் தமிழ், மலையாளம், தெலுங்கு என பல மொழிகளில் ரீமேக் ஆகி வருகிறது. அந்தகன் என்ற பெயரில் தமிழில் ரீமேக் ஆகிவரும் இந்தப் படத்தில் நடிகர் பிரஷாந்த் கதாநாயகனாக நடித்து வருகிறார். இந்தப் படத்தை பிரசாந்தின் தந்தை தியாகராஜனே இயக்குகிறார்.

இந்தப் படத்தில் நடிகை சிம்ரன் தபு கதாபாத்திரத்தில் நடிக்கிறார். 19 ஆண்டுகளுக்குப் பிறகு சிம்ரன் பிரஷாந்த் உடன் இந்தப் படத்தில் இணைந்து நடிக்கிறார். ராதிகா ஆப்தே கதாபாத்திரத்தில் நடிகை ப்ரியா ஆனந்த் நடிக்கிறார்.

பிரசாந்த் படத்தில் போலீஸ் அதிகாரியாக மிரட்டும் சமுத்திரக்கனி!

தற்போது இந்தப் படத்தில் நடிகரும் இயக்குனருமான சமுத்திரக்கனி இணைந்துள்ளார். இந்தப் படத்தில் அவர் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். படப்பிடிப்பில் அவர் கலந்துகொண்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

மேலும் வனிதா விஜயகுமார், இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார், யோகிபாபு உள்ளிட்டோரும் இந்தப் படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

Share this story