மலை மீது ஏறி திருவண்ணாமலை தீபத்தை தரிசித்த நடிகை!

மலை மீது ஏறி திருவண்ணாமலை தீபத்தை தரிசித்த நடிகை!

நடிகை சஞ்சிதா ஷெட்டி திருவண்ணாமலை தீபத்தை தரிசித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

தற்போது நடிகைகள் பலரும் ஆன்மிகத்தில் இறங்கி வருகின்றனர். அமலா பால் நவராத்திரி தினங்களில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கெட்டப்பில் வந்து ரசிகர்களுக்கு ஆன்மிக போதனை அளித்தார். அதே போல் சில நாட்களுக்கு முன்பு நடிகை நந்திதா பழனி முருகன் கோவிலுக்குச் சென்றிருந்தார். திருப்பதி கோவில், மதுரை மீனாட்சி அம்மன் கோவில் என திரைத்துறை பிரபலங்கள் கடவுளைத் தரிசிக்க கோவில்களுக்குச் செல்வது வழக்கம்.

தற்போது கார்த்திகை மாதம் என்பதால் திருவண்ணாமலை தீப ஜோதியைப் பார்க்க பலரும் வருகை தருவர். அந்த வகையில் நடிகை சஞ்சிதா ஷெட்டி 2761 அடி மலைமேல் ஏறி திருவண்ணாமலை தீபத்தை தரிசனம் செய்ததாகத் தெரிவித்துள்ளார்.

அந்த புகைப்படங்களை வெளியிட்டுள்ள சஞ்சிதா ஷெட்டி “

திருவண்ணாமலை, அதிசய மலை

ஏறும் உயரம்: 2671 அடி. அருணாச்சல மலை ஏறியது எனக்கு உண்மையிலேயே அதிசயம்

மலையின் உச்சம் வரை செல்ல 1 மணி 40 நிமிடங்கள். மலையிலிருந்து கீழே இறங்க நேரம் 2 மணி 30 நிமிடங்கள். (ஓய்வு எடுப்பது உட்பட)

தீபம் பாய்ஸ் & ஐயப்பனுக்கு சிறப்பு நன்றி
அருணகிரி. இந்த ஆசீர்வாதங்களுக்கு கடவுள் குருக்களுக்கு நன்றி” என்று தெரிவித்துள்ளார்.

கன்னட நடிகை சஞ்சிதா ஷெட்டி தமிழில் தில்லாலங்கடி படத்தின் மூலம் அறிமுகமானார். சூதுகவ்வும், ரம் ,ஜானி உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார்.

Share this story