பாரிஸ் ஜெயரா’ஜ் படத்தின் டப்பிங் வேலையை தொடங்கினார் சந்தானம் !

பாரிஸ் ஜெயரா’ஜ் படத்தின் டப்பிங் வேலையை தொடங்கினார் சந்தானம் !

பிஸ்கோத்து படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகர் சந்தானம் தனது அடுத்த வரவான ‘பாரிஸ் ஜெயரா’ஜ் படத்தின் டப்பிங் வேலையில் முழுவீச்சில் இறங்கியுள்ளார்.

கே ஜான்சன் என்ற அறிமுக இயக்குனர் இயக்கத்தில் சந்தானம் நடித்த ‘A1’ திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனால் சந்தானம், மீண்டும் கே. ஜான்சனுடன் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.

பாரிஸ் ஜெயரா’ஜ் படத்தின் டப்பிங் வேலையை தொடங்கினார் சந்தானம் !

‘பாரிஸ் ஜெயரா’ஜ் என தலைப்பிட்டுள்ள இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார். காவியத் தலைவன், செம போத ஆகாதே படங்களில் நடித்த அனைகா சோதி என்பவர் இப்படத்தில் கதாநாயகியாக நடிக்க உள்ளார். மேலும் சன் மியூசிக் சேனலில் விஜே வாக இருந்த சஸ்திகா ராஜேந்திரன் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிகிறார்.

பாரிஸ் ஜெயரா’ஜ் படத்தின் டப்பிங் வேலையை தொடங்கினார் சந்தானம் !

இப்படத்தில் பாரிஸ் கார்னரை சேர்ந்த ஒரு கானா பாடகராக சந்தானம் நடிக்கிறார்.கானா பாடகர் ஒருவருக்கு காதல் வந்துவிட்டால் வாழ்க்கை எப்படியெல்லாம் மாறும் என்பதை சந்தானம் ஸ்டைலில் நகைச்சுவையுயுடன் வெளிப்படுத்துவது தான் படத்தின் கதைசுருக்கமாம்.

Share this story