மக்களிடம் அமோக ஆதரவு பெற்ற என்ஜாய் எஞ்சாமி… சந்தோஷ் நாராயணன் நெகிழ்ச்சி!

மக்களிடம் அமோக ஆதரவு பெற்ற என்ஜாய் எஞ்சாமி… சந்தோஷ் நாராயணன் நெகிழ்ச்சி!

பாடகர்கள் தீ மற்றும் தெருக்குரல் அறிவு ஆகியோர் காம்போவில் உருவாகியுள்ள என்ஜாய் எஞ்சாமி பாடல் தான் தற்போது தமிழ்நாட்டின் ஹாட் டாபிக். இளைஞர்கள் மத்தியில் இந்தப் பாடல் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. ரிப்பீட் மோடில் இந்தப் பாடலை பலமுறை கேட்டு வருவதாக பலரும் தெரிவித்து வருகின்றனர்

இந்தப் பாடல் ஏஆர் ரஹ்மான் சுயாதீன கலைஞர்களுக்காக உருவாகியுள்ள மாஜா என்ற தளத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ளது. சந்தோஷ் நாராயணன் இந்தப் பாடலுக்கு இசையமைத்ததோடு தயாரிப்பையும் செய்துள்ளார்.

மக்களிடம் அமோக ஆதரவு பெற்ற என்ஜாய் எஞ்சாமி… சந்தோஷ் நாராயணன் நெகிழ்ச்சி!

இந்தப் பாடல் மக்களிடம் அமோக ஆதரவைப் பெற்றுள்ளதை அடுத்து சந்தோஷ் நாராயணன் நன்றி தெரிவித்துள்ளார்.


“என்ஜாமி மீது மிகுந்த அன்பு செலுத்திய அனைவருக்கும் மிக்க நன்றி. தீ, அறிவு, முழு அணியும் நானும் உங்கள் நிபந்தனையற்ற ஆதரவுக்கு உணர்வுப்பூர்வமாக நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். இது எங்களை பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்தப் பாடல் அனைத்து இசைக்கலைஞர்கள் மற்றும் சுயாதீன கலைஞர்களுக்கானது, அதன் வெளிப்பாடுகள் மகிமைப்படுத்தப்பட வேண்டும். ஆதரவு மற்றும் அங்கீகாரம் பெறப்படவேண்டிய குரல்களையும் கலைஞர்களையும் அடையாளம் காண்பதற்கான முயற்சியை நாங்கள் தொடருவோம். நாம் முன்னேறும்போது இந்த புரட்சியில் சேர பல சிறந்த கலைஞர்கள் உள்ளனர். எல்லாவற்றிற்கும் மேலாக, நாங்கள் செய்யும் அனைத்தும் உங்களுக்காக என் அன்பான மக்களே” என்று அவர் தெரிவித்துள்ளார்.

Share this story