20 ஆண்டு கால வாழ்க்கை பயணம்… நெகிழ்ந்த ராதிகா சரத்குமார் !

20 ஆண்டு கால வாழ்க்கை பயணம்… நெகிழ்ந்த ராதிகா சரத்குமார் !

திருமணமாகி 20 ஆண்டுகள் நிறைவையொட்டி ட்விட்டரில் தனது மகிழ்ச்சியான நினைவுகளை பகிர்ந்துள்ளார் நடிகை ராதிகா.

தமிழ் திரையுலகில் நட்சத்திர தம்பதிகளாக வலம் வருபவர்கள் சரத்குமார்-ராதிகா தம்பதி. கடந்த 2001ம் தேதி பிப்ரவரியில் 4ம் தேதி திருமணம் செய்துக்கொண்டனர். இணைப்பிரியா தம்பதிகளாக வலம் இவர்களுக்கு, ராகுல் என்ற மகன் உள்ளார்.

20 ஆண்டு கால வாழ்க்கை பயணம்… நெகிழ்ந்த ராதிகா சரத்குமார் !

சரத்குமார் சில படங்களில் நடித்துக்கொண்டே அரசியலில் ஈடுபட்டு வருகிறார். அதேபோன்று ராதிகா, சினிமாவில் நடித்து வருகிறார். இருந்தாலும் சினிமாவிட சீரியல்களில் அதிக கவனம் செலுத்தி நடித்து வருகிறார். இப்படி இருவரும் பிசியாக இருந்து வருகின்றனர்.

20 ஆண்டு கால வாழ்க்கை பயணம்… நெகிழ்ந்த ராதிகா சரத்குமார் !

இந்நிலையில் சரத்குமார்- ராதிகா தம்பதிக்கு இன்று திருமண நாள். திருமணமாகி 20 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளதால், அதை கொண்டாடி வருகின்றனர். இதையொட்டி சரத்குமார்-ராதிகா தம்பதிக்கு திரையிலகினர், முக்கிய பிரமுகர்கள் மற்றும் ரசிகர்கள் என பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ள நடிகை ராதிகா,  சிறந்த நண்பர்களான இருந்த எங்களை ஒன்றாக இணைத்தது விதியும் வினோதம்தான். இந்த ஒற்றுமையான பயணம் மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாகவும், நீங்கள்தான் எனக்கு வலிமையை தரும் சக்தி. உங்களை நான் நேசிக்கின்றேன் என்று கூறியுள்ளார்.

Share this story