செம்பருத்தி சீரியலுக்கு புது என்ட்ரி… ரசிகர்களை மகிழ்விக்க கதையில் திருப்பங்கள்…

செம்பருத்தி சீரியலுக்கு புது என்ட்ரி… ரசிகர்களை மகிழ்விக்க கதையில் திருப்பங்கள்…

செம்பருத்தி சீரியலில் ரசிகர்களை மகிழ்விக்க புதிய திருப்பங்களோடு கதை மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

செம்பருத்தி சீரியலுக்கு புது என்ட்ரி… ரசிகர்களை மகிழ்விக்க கதையில் திருப்பங்கள்…

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களிலேயே அதிக அளவில் ரசிகர்களை கொண்டிருக்கும் சீரியல் ‘செம்பருத்தி’. இந்த சீரியல் முக்கிய கதாபாத்திரத்தில் திரைப்பட நடிகை ப்ரியா ராமன் நடித்து வருகிறார். அவர் நடிக்கும் அகிலாண்டேஸ்வரி என்ற கேரக்டர் இல்லதரசிகளிடையே மிகவும் பிரபலம். இந்த சீரியலின் ஹீரோவாக நடித்து வந்த கார்த்திக் அண்மையில் விலகினார். அந்த கேரக்டரில் நடிகர் அக்னி நடித்து வருகிறார்.

செம்பருத்தி சீரியலுக்கு புது என்ட்ரி… ரசிகர்களை மகிழ்விக்க கதையில் திருப்பங்கள்…

இதையடுத்து ஜனனி அசோக் குமார் உள்ளிட்ட சில நடிகர்கள் சீரியலில் இருந்து நீக்கப்பட்டனர். இதனால் இந்த சீரியலின் சுவராஸ்யம் குறைந்து காணப்பட்டது. இதனால் சீரியலை ரசிகர்களை கவரும் வண்ணம் சில மாற்றங்களை செய்துள்ளனர். பல அதிரடி திருப்பங்களை கதையில் ஏற்படுத்தவுள்ளனர்.

செம்பருத்தி சீரியலுக்கு புது என்ட்ரி… ரசிகர்களை மகிழ்விக்க கதையில் திருப்பங்கள்…

இந்நிலையில் இந்த சீரியலில் நடிகை துர்கா இணைந்துள்ளார். இந்த சீரியலில் அவர் உமா என்ற கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். இது குறித்து தனது இன்ஸ்டாகிராமில் கூறியுள்ள அவர், செம்பருத்தி சீரியலில் நடிக்கும் தனக்கு ஆதரவளிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார். அதோடு ப்ரியா ராமனுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

Share this story