மோகன்லால் படத்தில் இணைந்தா ஷ்ரத்தா ஸ்ரீநாத்… ஐந்து வருடங்களுக்குப் பிறகு மலையாளத்தில் நடிக்கும் படம்!

மோகன்லால் படத்தில் இணைந்தா ஷ்ரத்தா ஸ்ரீநாத்… ஐந்து வருடங்களுக்குப் பிறகு மலையாளத்தில் நடிக்கும் படம்!

நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் மோகன்லாலின் படத்தில் கதாநாயகியாக நடிக்க உள்ளார்.

மலையாளத்தில் இயக்குனர் பி உன்னிகிருஷ்ணன் இயக்கத்தில் மோகன்லால் இணைந்துள்ள படத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். மலையாளத்தில் ப்ளாக்பஸ்டர் ஹிட் அடித்த ‘புலிமுருகன்’ படத்திற்கு கதை எழுதிய உதயகிருஷ்ணா என்பவர் தான் இந்தப் படத்திற்கும் ஸ்கிரிப்ட் எழுதியுள்ளார்.

நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் இப்படத்தில் ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரியாக நடிக்க இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. இப்படம் 18 கோடி பட்ஜெட்டில் படம் உருவாக இருக்கிறது.

மோகன்லால் படத்தில் இணைந்தா ஷ்ரத்தா ஸ்ரீநாத்... ஐந்து வருடங்களுக்குப் பிறகு மலையாளத்தில் நடிக்கும் படம்!

இப்படத்தில் அவர் கதாபாத்திரத்திற்கு அதிக முக்கியத்துவம் இருப்பதாகவும் கூறப்படுகிறது. உன்னிகிருஷ்ணன் போன் காலில் ஷ்ரத்தாவிடம் படத்தின் ஸ்கிரிப்டை விவரித்துள்ளார். அது ஷ்ரத்தாவுக்கு பிடித்துவிடவே உடனே நடிக்க சம்மதித்துள்ளார். இப்படம் நவம்பர் மாதம் துவங்க உள்ளது.

மாஸ் என்டர்டெய்னராக உருவாக இருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு கொச்சியில் நடைபெற இருக்கிறது. நடிகர்கள் மற்றும் குழுவினர் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்.

ஷ்ரத்தா ஸ்ரீநாத் மலையாளத்தில் கடைசியாக 2015-ம் ஆண்டு வெளியான ‘கோஹினூர்’ படத்தில் நடித்திருந்தார். தமிழில் கடைசியாக விஷாலுடன் ‘சக்ரா’ படத்தில் நடித்து வருகிறார். மாதவனுடன் ‘மாறா’ படத்திலும் நடித்துள்ளார்.

இதற்கிடையில் மோகன்லால் ‘த்ரிஷ்யம் 2’ படத்தில் நடித்து வருகிறார்.

Share this story