அடப்பாவமே! ஊர் ஊராகச் சென்று மேடையில் நடனமாடும் 'ஸ்ருதிஹாசன் '!
தமிழ் சினிமாவில் முக்கிய நடிகையாக வலம் வந்தவர் நடிகை ஸ்ருதிஹாசன். பாடகர், இசையமைப்பாளர், நடிகை, டான்சர் என எல்லாவற்றிலும் தேர்ந்தவர் .அதுசரி, புலிக்கு பிறந்தது பூனையாகுமா.கமலின் ரத்தமாச்சே இருக்காதா பின்ன!
இவர் நடிக்கும் அடுத்த படம் ‘லாபம்’. விஜய்சேதுபதி நடிகராக நடிக்கிறார். இப்படத்தை இயக்குனர் எஸ. ப. ஜனநாதன் இயக்குகிறார். இவர் தன்னுடைய படங்கள் அனைத்திலும் சமூக கருத்தை ஆழமாக பதிய வைப்பவர். அதற்கு சான்றாக ஈ, பொறம்போக்கு ,பேராண்மை படங்களை சொல்லலாம்.
‘லாபம்’ படத்தில் விஜய்சேதுபதி ஒரு சமூகப்போராளியாகவும், ஸ்ருதிஹாசன் ஊர் ஊரக சென்று மேடையில் ஆடும் கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். அவ்வாறு ஒரு ஊருக்கு செல்லும்போதுதான் விஜய்சேதுபதிக்கு ஸ்ருதிக்கும் காதல் வருவதுபோல கதையாம். இருப்பினும் காதல் காட்சிகள் மிக மிக குறைவாம். ஸ்ருதி அணைத்து கதாபாத்திரங்களிலும் நன்றாகவே நடிப்பார். இருப்பினும் மேடை நடன கலைஞராக எப்படி நடிக்கப்போகிறாரோ? பாவம் , என்று ரசிகர்கள் புலம்பி வருகின்றனர்.