முதல்ல விஜய், இப்போ ஸ்ருதி ஹாசன்… மகேஷ்பாபுவின் க்ரீன் இந்தியா சேலஞ்சை ஏற்கும் பிரபலங்கள்!

முதல்ல விஜய், இப்போ ஸ்ருதி ஹாசன்… மகேஷ்பாபுவின் க்ரீன் இந்தியா சேலஞ்சை ஏற்கும் பிரபலங்கள்!

தெலுங்கு ஸ்டார் நடிகர் மகேஷ் பாபு தனது பிறந்தநாளன்று மரங்கன்று நட்டு பசுமை இந்தியா சேலஞ்சை பூர்த்தி செய்தார். அதோடு அவர் வெளியிட்ட பதிவில் நடிகர் விஜய் மற்றும் ஸ்ருதி ஹாசன் ஆகியோர் க்ரீன் இந்தியா சேலஞ்சை ஏற்குமாறு பரிந்துரை செய்தார்.


அதையடுத்து மகேஷ் பாபுவின் சேலஞ்சை ஏற்ற விஜய் தன்னுடைய வீட்டில் மரக்கன்று நட்ட புகைப்படங்களை தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டார். விஜய் போட்டோ வெளியிட்ட சில நொடிகளிலேயே சோசியல் மீடியாவில் ட்ரெண்ட் ஆனது.


தற்போது நடிகை ஸ்ருதி ஹாசனும் மரங்கன்று நட்டு மகேஷ் பாபுவின் சேலஞ்சை ஏற்றுள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில் “ பசுமை இந்தியா திட்டத்தில் பங்கெடுக்க என்னை பரிந்துரை செய்த மகேஷ்பாபு மற்றும் தேவி ஸ்ரீ பிரசாத் ஆகியோருக்கு நன்றி. பசுமை இந்தியா நோக்கிய ஒரு அடி, நான் ஹ்ரித்திக் ரோஷன், தமன்னா, ராணா டகுபதி ஆகியோருக்கு இந்த சேலஞ்சை விடுக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

Share this story