மீண்டும் இணையும் பிரஷாந்த்- சிம்ரன் ஜோடி!?

மீண்டும் இணையும் பிரஷாந்த்- சிம்ரன் ஜோடி!?

‘அந்தாதூன்’ படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிகை சிம்ரனை நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடந்து வருவதாகக் கூறப்படுகிறது.

இந்தியில் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் ஆயுஷ்மன் குரானா, ராதிகா ஆப்தே, தபு உள்ளிட்டோர் நடிப்பில் 2018-ல் வெளியான அந்தாதுன் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இப்படத்திற்காக ஆயுஷ்மான் குரானா தேசிய விருது பெற்றது குறிப்பிடத்தக்கது.

மீண்டும் இணையும் பிரஷாந்த்- சிம்ரன் ஜோடி!?

ஒரு படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தாலே அதை மற்ற மொழிகளில் ரீமேக் செய்வது சினிமா வழக்கம் தானே. அப்படி அந்தாதுன் படத்தில் தமிழ் ரீமேக் உரிமையை நடிகர் பிரசாந்தின் தந்தை தியாகராஜன் வாங்கினார். அதையடுத்து அந்தாதுன் படத்தின் தமிழ் ரீமேக்கில் பிரசாந்த் நடிக்க இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.

இந்தத் தமிழ் ரீமேக்கை முதலில் மோகன்ராஜா இயக்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. அதையடுத்து சமீபத்தில் மோகன்ராஜா இந்தப் படத்திலிருந்து அவர் விலகிவிட்டார். அதையடுத்து ஜோதிகா நடிப்பில் ‘பொன்மகள் வந்தாள்’ படத்தை இயக்கிய ஜேஜே பிரெட்ரிக் என்பவர் பிரசாந்தை வைத்து இந்தத் தமிழ் ரீமேக்கை இயக்க இருப்பதாகத் தெரிவித்தனர்.

director JJ Fredrick

அந்தாதுன் படத்தின் தபு-வின் கதாபாத்திரம் மிகவும் முக்கியமானது. மேலும் அவரது நடிப்பு பலரால் பாராட்டப்பட்டது. எனவே தமிழ் ரீமேக்கில் நடிக்க அத்தகைய வலிமையான திறம் மிக்க நடிகையைத் தேடி வந்தனர். நயன்தாரா, தபு, ஐஸ்வர்யா ராய் என பல நடிகைகளிடம் அந்தக் கதாபத்திற்காக பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது.

மீண்டும் இணையும் பிரஷாந்த்- சிம்ரன் ஜோடி!?

தற்போது நடிகை சிம்ரனிடம் தபு கதாபாத்திரத்தில் நடிக்க பேச்சு வார்த்தை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது. சிம்ரன் இதற்கு முன்னர் பல சவால் மிக்க கதாபாத்திரங்களிலும் திறம்பட நடித்தவர். எனவே அவர் இந்தக் கதாபாத்திரத்திற்கு பொருத்தமாக இருப்பார் என்று படக்குழு திட்டமிட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

பிரஷாந்த்-சிம்ரன் ஜோடி ஜெய், கண்ணெதிரே தோன்றினால், தமிழ், ஜோடி, பார்த்தேன் ரசித்தேன் என ஐந்து படங்களில் சேர்ந்து நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Share this story