நெஞ்சம் நெகிழ்ந்து நன்றி கூறிய மக்கள்… டிவி நிகழ்ச்சியில் கண் கலங்கிய சோனு சூட்!

நெஞ்சம் நெகிழ்ந்து நன்றி கூறிய மக்கள்… டிவி நிகழ்ச்சியில் கண் கலங்கிய சோனு சூட்!

அவர் நடித்த திரைப்படங்களால் வில்லனாகவே பார்க்கப்பட்டு வந்த நடிகர் நிஜ வாழ்க்கையில் ஹீரோவாக மாறிய தருணம் அது. கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கி வாழ்வாதாரம் இழந்து நம்பிக்கை அற்று கண்ணீருடன் நின்ற ஏழைகளின் முன் தன்னுடைய உதவிகள் மூலம் கடவுளாகத் தென்பட்டார் சோனு சூத்.
நெஞ்சம் நெகிழ்ந்து நன்றி கூறிய மக்கள்… டிவி நிகழ்ச்சியில் கண் கலங்கிய சோனு சூட்!
இந்த கொரோனா காலகட்டத்தில் பலரின் வாழ்வில் ஒளியேற்றிய சோனு சூட் உண்மையிலேயே மக்களிடையே ஹீரோவாக பார்க்கப்பட்டு வருகிறார்.
ஊரடங்கால் சொந்த ஊர் செல்ல முடியாமல் சிக்கிக் கொண்ட புலம்பெயர் தொழிலாளர்களுக்கு அவர்கள் சொந்த ஊர் செல்ல வசதி ஏற்படுத்தி கொடுத்து உணவு தங்கும் வசதி ஏற்பாடுகளையும் செய்து கொடுத்தார். தன் மகள்களை வைத்து வயலை உழுத ஆந்திர விவசாயிக்கு உடனே டிராக்டர் வாங்கி கொடுத்தார்.
நெஞ்சம் நெகிழ்ந்து நன்றி கூறிய மக்கள்… டிவி நிகழ்ச்சியில் கண் கலங்கிய சோனு சூட்!
வாழ்வாதாரம் இழந்து ரோட்டில் சிலம்பம் சுற்றி உதவி கேட்டார் மூதாட்டிக்கு தற்காப்பு கலை பயிற்சி பள்ளி ஆரம்பித்து கொடுப்பதாக உறுதியளித்தார். இதற்கெல்லாம் மேலாக தனது பிறந்த நாள் பரிசாக வேலையில்லாத மூன்று லட்சம் பேருக்கு பல நிறுவனகளின் உதவியுடன் வேலை வாய்ப்பை உருவாக்கித் தருவதாக அறிவித்தார். பின்னர் ஆதரவற்ற 3 குழந்தைகளை தத்தெடுத்தார். இவ்வாறு தொடர்ச்சியாக உதவிகள் செய்து மக்கள் மனதில் ஹீரோவாக நீங்கா இடம் பிடித்து வருகிறார் சோனு சூட்.
இதையடுத்து, தற்போது சூழ்ந்து கபில் சர்மா தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி ஒன்றில் சோனு கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியின் ப்ரோமோ ஒன்றை சோனி டிவி தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர். அதில் சோனு சூட் உதவியால் பலனடைந்தவர்கள் நெஞ்சம் நெகிழ்ந்து நன்றி கூறினர். அதைப் பார்த்த சோனு சூட் நிகழ்ச்சி மேடையிலேயே கண் கலங்கினார். இந்த வீடியோசமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

Share this story