நான் ஒன்னு சொன்னா அவங்க ஒன்னு போடுறாங்க… ஸ்ருதி ஹாசன் ஆவேசம்!

நான் ஒன்னு சொன்னா அவங்க ஒன்னு போடுறாங்க… ஸ்ருதி ஹாசன் ஆவேசம்!

நடிகை ஸ்ருதி ஹாசன் தென்னிந்திய திரைத்துறையில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். நடிகைஎன்பதையும் தாண்டி பாடகி, ஃபேஷன் டிசைனர், என பன்முகத் திறமையுடன் சினிமாவில் வளம் வருபவர்  ஸ்ருதி ஹாசன்.  சமூக ஊடகங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர், தனது ரசிகர்களுடன் உரையாட நிறைய நேரம் செலவிட்டு வருகிறார்.

நான் ஒன்னு சொன்னா அவங்க ஒன்னு போடுறாங்க… ஸ்ருதி ஹாசன் ஆவேசம்!

சமீபத்தில் ஒரு நேர்காணலில் தான் பவன் கல்யாணுடன் நடித்த கபார் சிங் படம் குறித்து பேசியிருந்தார். அவர் அந்தப் படத்தைப் பற்றி பேசிய கருத்துக்களைத் திரித்து சில ஊடகங்கள் தவறான செய்தியை வெளியிட்டு வருவதாக ஸ்ருதி ஹாசன் தெரிவித்துள்ளார்.

சில தெலுங்கு பத்திரிகைகள் நான் ஒரு தேசிய ஊடகத்திற்கு கொடுத்த நேர்காணலில் கூறியவற்றை தவறாகப் புரிந்து கொண்டு பொய்யான கட்டுரைகளை எழுதுகின்றனர். ரேஸ் குர்ரம் மற்றும் கபார் சிங் போன்ற படங்களில் ஒரு பகுதியாக இருந்ததில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன்- பவன் கல்யாண் காருவுடன் கபார் சிங்கில் நடித்தது என் வாழ்க்கையை மாற்றியது.” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் “தொடர்ந்து .. தெலுங்கு மற்றும் தென்னிந்திய திரையுலகின் ஒரு பகுதியாக இருப்பது என் வாழ்வின் ஒரு பகுதியாகும், உண்மையிலேயே. அந்த நேர்காணலில் நான் நடித்த இந்தி படங்களுக்கும், வட இந்திய மற்றும் தென்னிந்திய படங்களுக்கும் இடையேயான வித்தியாசத்தை குறிக்கும் சூழலில் தெரிவிக்கப்பட்டது. இந்த விளக்கங்கள் அனைவர்க்கும் தெளிவை ஏற்படுத்தும் என்று நம்புகிறேன்” என்றும் தெரிவித்துள்ளார்.

Share this story