பக்தி ஃமோட் ஆன்… அம்மனுக்கு மாலையிட்டு ஆன்மிகத்தில் ஆழ்ந்த ஸ்ரீரெட்டி!

பக்தி ஃமோட் ஆன்… அம்மனுக்கு மாலையிட்டு ஆன்மிகத்தில் ஆழ்ந்த ஸ்ரீரெட்டி!

சர்ச்சை நடிகை ஸ்ரீரெட்டி அம்மனுக்கு மாலையிட்டு பக்திமயமாக மாறியிருப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்ரீரெட்டி இருக்குமிடத்தில் சர்ச்சைக்கு பஞ்சமிருக்காது. தமிழ், தெலுங்கு திரையுலகில் பிரபல இயக்குநர்கள், நடிகர்களை அனைவரும் படவாய்ப்பு தருவதாக கூறி தன்னை பாலியல் இச்சைக்கு பயன்படுத்திக்கொண்டார்கள் என்று குற்றம் சாட்டினார். விஷால், ஏ.ஆர். முருகதாஸ், ஸ்ரீகாந்த், ராகவா லாரன்ஸ் உள்ளிட்ட இன்னும் பலர் இதில் அடக்கம்.

பக்தி ஃமோட் ஆன்… அம்மனுக்கு மாலையிட்டு ஆன்மிகத்தில் ஆழ்ந்த ஸ்ரீரெட்டி!

நடுரோட்டில் மேலாடையை கழட்டி அரை நிர்வாணப் போராட்டம் செய்தார். கலந்துகொள்ளும் நேர்காணல்களிலும், கொடுக்கும் பேட்டிகளிலும் யாரைப் பற்றியும் தைரியமாகப் பேசக்கூடியவர்.

ஆனால் இந்த லாக்டவுன் நேரத்தில் ஸ்ரீரெட்டி சற்று சைலன்ட் ஆகி விட்டார். எந்த சர்ச்சையிலும் இறங்காமல் சமையல் குறிப்புகள், உடற்பயிற்சி டிப்ஸ் என விடீயோக்கள் வெளியிட்டு வருகிறார். ஸ்ரீரெட்டி அடைந்திருக்கும் மாற்றம் தான் அனைவரையும் ஆச்சரியப்படுத்திவிட்டது.

இன்று முதல் நவராத்திரி பூஜை ஆரம்பிப்பதை அடுத்து ஸ்ரீரெட்டி அம்மனுக்கு மாலையிட்டுள்ளார். பக்திமயமாக மாறிய ஸ்ரீரெட்டி பக்கதர்களுக்கு பிரசாதம் வழங்கும் வீடியோவை வெளியிட்டு “இன்றைக்கு நவராத்திரி பவானி மாலை அணிந்துள்ளேன். என்னை ஆசீர்வதியுங்கள்” என்று தெரிவித்துள்ளார்.

https://www.facebook.com/watch/?v=821371608608195

Share this story