பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே விட்டா போதும் என வீடு திரும்பிய சுச்சி…

பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே விட்டா போதும் என வீடு திரும்பிய சுச்சி…

பிக்பாஸ் வீட்டில் இருந்து நேற்றைய எபிசோட்டில் பாடகி சுசித்ரா எலிமினேட் செய்யப்பட்டார்.

பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே விட்டா போதும் என வீடு திரும்பிய சுச்சி…

வழக்கம்போல பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து சுசித்ரா வெளியேற்றப்பட்ட உடன் பலதரப்பட்ட விமர்சனங்கள் எழுந்தன.
அதில், சுச்சிக்கு மனரீதியாக சில பிரச்சினைகள் இருந்ததாகவும் அதனால் தான் அவர் வெளியேற்றப்பட்டதாகவும் ஒரு தரப்பில் கூறப்படுகிறது, சிலர் சுச்சி வெளியேற்றப்பட்டதுக்கு ஓட்டிங் தான் காரணம் என்றும் கூறுகின்றனர்.

இந்நிலையில் நேற்றைய தினம் வெளியேற்றப்பட்ட அவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் ”நான் பிக்பாஸ் ஜெயிலில் இருந்து தப்பித்து விட்டேன் ” என்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். பிக் பாஸ் வீட்டில் இருக்கும் பாலாஜி-சிவானி இடையேயான காதல் ஒரு செட்டப் காதல் என்றும் அவர் மறைமுகமாக தெரிவித்துள்ளார்.

”ஏற்கனவே என்னைப்பற்றி பிரித்து கூறப்பட்டதை ஆழ்மனதில் நான் நம்பி இருந்தாலும் பிக்பாஸ் குறும்படம் என்னை மாற்றி காண்பிக்கப்பட்டதாலும் பார்ப்பதற்கு நான் எப்படி இருப்பேன் என்பதை மீண்டும் எனக்கு நினைவு படுத்திக்கொள்ள விரும்புகிறேன் ” எனக்கூறி தனது புகைப்படத்தை அவர் பதிவிட்டுள்ளார்.

பிக்பாஸ் வீட்டில் ஒருவர் நாமினேட் ஆனவுடன் அந்த வாரத்திலேயே வெளியேற்றப்பட்டது இதுவே முதல் முறையாகும்.
பாடகி சுசித்ரா வெளியேற்றப் பட்டதையடுத்து பிக்பாஸ் வீட்டிற்குள் அடுத்தபடியாக ஏற்கனவே வெளியேற்றப்பட்ட சுரேஷ் சக்ரவர்த்தி மற்றும் சீரியல் நடிகர் முகமது அஜீம் ஆகியோர் வைல்ட் கார்டு என்ட்ரியில் வீட்டுக்குள் நுழைய போவதாக கூறப்படுகிறது.

Share this story