சூர்யா நம்மை அழ வைத்துவிட்டார்… சூரரைப் போற்று படம் குறித்து வடிவேலு!

சூர்யா நம்மை அழ வைத்துவிட்டார்… சூரரைப் போற்று படம் குறித்து வடிவேலு!

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ‘சூரரைப் போற்று’ படம் அமேசான் பிரைமில் நவம்பர் 11-ம் தேதி இரவு வெளியாகியது. படம் வெளியானத்திலிருந்து ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். படம் பார்க்கும் அனைவரும் படத்தை பாராட்டி வருகின்றனர்.

மக்கள் மட்டுமின்றி பிரபலங்கள் பலரும் சூர்யாவின் நடிப்பும் சுதா கொங்கராவின் இயக்கம், ஜிவி பிரகாஷின் இசை ஆகியவற்றைப் பாராட்டி வருகின்றனர். தொடர் தோல்விகளைச் சந்தித்து வந்த சூர்யாவிற்கு இப்படம் மிகப்பெரிய கம்பேக் கொடுத்துள்ளது. சூர்யா கண்ணாலேயே பல காட்சிகளில் நடித்து நம்மை மெய்மறக்கச் செய்கிறார்.

Image

தற்போது இந்தப் படத்தைப் பார்த்துள்ள வைகைப்புயல் வடிவேலு சூர்யாவைப் பாராட்டியுள்ளார். படம் குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் “தம்பி சூர்யாவின் சூரரைப்போற்று படத்தை பார்த்தேன். அவர் அழும் இடங்களில் நம்மை அறியாமலே கண்ணீர் வருகிறது‌. இத்தகைய படைப்பை எம்மக்களுக்கு கொடுத்த படக்குழுவினருக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்” என்று தெரிவித்துள்ளார்.

Share this story