தயாரிப்பாளர் சங்கத் தலைவர் பதவிக்குப் போட்டியிடும் டி.ராஜேந்தர் வேட்புமனு தாக்கல்!

தயாரிப்பாளர் சங்கத் தலைவர் பதவிக்குப் போட்டியிடும் டி.ராஜேந்தர் வேட்புமனு தாக்கல்!

தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிடும் திரு டி.ராஜேந்தர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.

டி ராஜேந்தர் தற்போது சென்னை செங்கல்பட்டு காஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்டங்களில் தமிழ் திரைப்பட விநியோகிஸ்தர்கள் சங்கத் தலைவராக உள்ளார். நடக்கவிருக்கும் தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட இருப்பதாகவும் அவர் சமீபத்தில் தெரிவித்திருந்தார்.

Image

அதன்படி தலைவர் பதவிக்கு போட்டியிடும் டி.ராஜேந்தரும், செயலாளர் பதவிக்கு டி.மன்னனும் இன்று தயாரிப்பாளர் சங்க அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்தனர். சுபாஷ் சந்திர போஸ், R.V.உதயகுமார், மனோபாலா, சக்தி சிதம்பரம் ஆகியோர் உடனிருந்தனர்.

தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளின் பதவிக்காலம் 2019 ஏப்ரல் 30 அன்று முடிவடைந்தது. தற்போது தயாரிப்பாளர் சங்கத்தின் அடுத்த சங்க நிர்வாகிகளுக்கான தேர்தல் நடைபெற உள்ளது.

தயாரிப்பாளர் சங்கத் தலைவர் பதவிக்குப் போட்டியிடும் டி.ராஜேந்தர் வேட்புமனு தாக்கல்!

உயர்நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட தேர்தல் அதிகாரி எம்.ஜெயச்சந்திரன், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கு நவம்பர் 22 தேர்தல் தேதியாக தேர்தல் தேதியாக அறிவித்துள்ளார். 2020-22 தேர்தலுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் நவம்பர் 12 ஆம் தேதி வெளியிடப்படும். தேர்தல் நவம்பர் 22 ஆம் தேதி காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை சென்னை அடயார், எம்.ஜி.ஆர் ஜானகி கல்லூரியில் வைத்து நடைபெற உள்ளது.

Share this story