வாரிசு நடிகையின் செயலால் டென்ஷனான இயக்குனர்…

வாரிசு நடிகையின் செயலால் டென்ஷனான இயக்குனர்…

வாரிசு நடிகை ஒருவர் படப்பிடிப்பு தளத்தில் செய்த காரியத்தால் இயக்குனர் டென்ஷனாகி விட்டாராம்

தமிழ் திரையுலகில் படுபிசியாக இருந்த வாரிசு நடிகை ஒருவர், காதல் வசப்பட்டிருந்தார். காதலருடம் ஜாலியாக வலம் வந்த நடிகை, கொஞ்ச நாட்கள் படங்களில் கூட நடிக்காமல் வேறு திசையில் பயணம் மேற்கொண்டிருந்தார்.பின்னர் காதலில் ஏற்பட்ட பிரச்சனையால் தனிமையில் இருந்து வந்தார்.

திடீரென என்ன நடந்ததோ தெரியவில்லை தற்போது மீண்டும் படங்களில் நடிக்க வந்தார். ஒரு புதிய‌ படத்தில் கமிட்டான நடிகை தொடர்ந்து நடித்து வந்தார்.தொடர்ந்து நடித்து வந்தாலும் படப்பிடிப்பிலிருந்து திடீர்திடீரென எஸ்கேப்பாகி விடுவாராம். அப்படி ஒருநாள் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து கிளம்பி விட்டாராம்.


இதனால் டென்ஷனான இயக்குனர், நடிகை நடிக்கவிருந்த காட்சிகள் இல்லாவிட்டாலும் பரவாயில்லை, இனி அந்த நடிகை ஷூட்டிங் வரவேண்டாம் என கறாராக படக்குழுவினரிடம் சொல்லிவிட்டாராம். இதை கேள்விப்பட்ட நடிகை அதிர்ச்சி அடைந்துள்ளாராம்.

Share this story