இரண்டாவது திருமணம் செய்யும் விஜய் டிவி சீரியல் நடிகை.. பிரபலங்கள் வாழ்த்து !

deepa

விஜய் டிவி சீரியல் நடிகை ஒருவர் இரண்டாவது திருமணம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளார். 

சின்னத்திரையில் பிரபல சீரியல் நடிகையாக இருப்பவர் தீபா. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த சூப்பர் ஹிட் சீரியலான 'நாம் இருவர் நமக்கு இருவர்' சீரியலின் இரண்டாம் பாகத்தில் வடிவு என்ற வில்லி கதாபாத்திரத்தில் நடித்தார். இந்த சீரியலில் கிடைத்த பிரபலத்தை வைத்து ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'அன்பே சிவம்' சீரியலிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். 

deepa

அதேபோல் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரியமான தோழி சீரியலிலும் நடித்து வருகிறார். இதற்கு முன்னர் ரெக்க கட்டி பறக்குது மனசு, ஆண்டாள் அழகர், பகல் நிலவு உள்ளிட்ட சீரியல்களில் நடித்துள்ளார். அவர் நடித்து வரும் அனைத்து சீரியல்களிலும் நெகட்டிவ் கதாபாத்திரத்திலேயே தோன்றுவதால் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது. 

deepa

சின்னத்திரையில் பிசியாக நடித்து வரும் தீபா, விவாகரத்து ஆனவர். கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பிரிந்து வாழ்ந்து வருகிறார். தீபாவும், அவரது மகனும் தனியாக ஒரு வீட்டில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக எடிட்டர் சாய் கணேஷ் பாபுவை காதலித்து வருகிறார். இதையடுத்து விரைவில் அவரை திருமணம் செய்ய உள்ளதாக சமூக வலைத்தளத்தில் தகவல் வெளியாகி உள்ளது. அதோடு சாய் கணேஷ் பாபுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு தீபா இதை உறுதிப்படுத்தியுள்ளார். 

Share this story